வாவ்.. நிலாவை அவங்க அம்மா பாத்துட்டாங்களே.. ஆனா, நிலாவுக்குத்தான் தெரியல!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நிலா ராஜசேகர் பெத்த பொண்ணு இல்லை..வளர்த்த பொண்ணுதான்னு நிலாவுக்கு அவங்க வளர்ப்பு அம்மாவே சொல்லிடறாங்க.
இதுவரைக்கும் உன்னை அந்நியமா பார்த்து வளர்க்கலியேடி...பெத்த பொண்ணு மாதிரிதானே அவரும் நானும் வளர்த்தோம்...நான் சொல்றேன் நீ நீலாம்பரி வீட்டுக்குத்தான் மருமகளா போகணும்னு சொல்றாங்க.
நிலா கார்த்திக்கை காதலிக்கறா.. அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமப் போயிருது .அம்மாகிட்ட என் அம்மா யாரும்மான்னு கேட்க, உங்க அப்பாவோட தங்கச்சின்னு சொல்றாங்க.
கோயிலுக்கு போறா நிலா...நீலாம்பரி வீட்டில் வேலை செய்யும் ரேவதிதான் நிலா வளர்ப்பு அப்பாவின் தங்கை. தன் அண்ணன் உடம்பு நல்லானதுல கோயிலை சுத்தி மண்டிபோட்டு நேர்த்தி கடன் நிறைவேத்திட்டு இருக்காங்க.
அங்கே நிலா சாமி கும்பிட வந்திருக்கா..ஏற்கனவே ரேவதியை தெரியும்ன்றதால நிலாகிட்ட பேசிகிட்டு இருக்காங்க ரேவதி. நிலா சோகமா இருக்க என்னம்மான்னு கேட்க, என்னை வளர்த்தவங்கதான் அம்மாவும், அப்பாவும்.
விஜிக்கு ஓகே.. ராதிகாவுக்கு சத்தியமாக இந்த கேரக்டர் செட்டாகாதுங்க!
ஆனா,என்னை அவங்க நல்லாத்தான் வளர்த்தாங்கன்னு சொல்றா..சரி அப்டீன்னா உன் அம்மா யாருன்னு சொன்னாங்களான்னு கேட்கறாங்க ரேவதி.அப்பாவோட தங்கச்சி பொண்ணாம் நான்னு நிலா சொல்ல,ரேவதிக்கு பகீர்னு ஆகுது.
ஆமா, நிலாவின் வளர்ப்பு அப்பா ராஜசேகர். ராஜசேகர் ரேவதியின் அண்ணன்.சோ..நிலாவின் அம்மா ரேவதிதானே...பகீர்னு ஆகாதா... அழறாங்க..நிலாவை ஆசையா பார்க்கறாங்க..
நிலா கிளம்பறா...நான்தான் உன் அம்மான்னு அவகிட்ட சொல்ல முடியாம தவிக்கறாங்க ரேவதி. நிலா பாவம் இவங்கதான் நம்ம அம்மான்னு தெரியாம திரும்பி பார்த்துட்டு போயிகிட்டே இருக்கா.