கடைசியில நிலா எங்கேஜ் மென்ட் மோதிரத்தை சுட்டது தங்கக்ச்சியா.. .நல்ல கதை!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியல் ரொம்ப நல்ல இருக்கு.மத்திய நேரத்துக்கு இது ஒரு நலன் சீரியல்னு சொல்லலாம்.
நீலாம்பரி நிலா கார்த்திக்கை காதலிக்கறது தெரிஞ்சும், தன் பையன் சஞ்சய்க்கு கல்யாணகம் செய்துவைக்க முடிவு செய்து, ஆனா, நிலாவிடம் மட்டும் உன்னை உன் காதலனோடு சேர்த்து வைக்கறேன்னு சொல்லி ஏமாத்தி, எங்கேஜ் மென்ட் அரேஞ்ச் பண்றாங்க.
மோதிரத்தை கார்த்திக்கை எடுத்துட்டு வர சொல்லிட்டு, சஞ்சயை நிலா விரலில் மோதிரத்தை போட சொல்றாங்க. அந்த நேரம் பார்த்து பவர் கட். பவரை சரி செய்துட்டு, சஞ்சயை மோதிரம் போட சொன்னா, சஞ்சய் கையில் இருந்த மோதிரத்தை காணோம்.
என்னை யாரோ இடிச்சது மாதிரி இருந்துச்சும்மா.. இப்போ மோதிரத்தை காணோமு சொல்றான். தம்பி மோதிரத்தை கழட்டி மாத்திக்கலாம்னு நீலாம்பரி சொல்ல, நிலாவின் தந்தைக்கு உடன்பாடில்லை. இவ்ளோ அவசரா இப்படி சகுனம் சரியில்லாம இதை நடத்த வேணாம்னு சொல்லிட்டு போனை அழைச்சுக்கிட்டு போயிடறாரு.
பீச்சுல நீலாம்பரியின் மகன் சஞ்சய் நிலாவின் தங்கச்சி ஸ்வேதாவோட உட்கார்ந்து லவ் பண்ணிக்கிட்டு இருக்கான்.என்ன சஞ்சய் நிலா கிடைக்கலேன்னு ஏமாற்றத்துல இருக்கியான்னு ஸ்வேதா கிண்டலடிக்கறா.
அடப் பாவமே.. அழகம்மை ரெண்டாவது மருமக வீட்டை விட்டு போயிட்டாளாமே!
என்ன ஸ்வேத இப்படி பேசறே.. நம்ம கல்யாண வாழ்க்கை நல்லா இருக்கணும்னுதானே நிலா கூட கல்யாணம் நடக்க சம்மதிச்சேன். உனக்கு தெரியாதா.. கல்யாணத்துக்குள்ள பணத்தை வாங்கிருவேன்னு சொல்றான்.
மோதிரம்தான் எப்படி காணாம போச்சுன்னு தெரியலைன்னு சொல்றான். அட மக்கு சஞ்சய்.. அன்னிக்கு பவர் காட்டன் என் ஏற்பாடுதான். இதோ பாரு நிலா கையில போட வேண்டிய மோதிரம் என் கையிலன்னு காமிக்கற.
அடிப்பாவி.. அப்பாவி மாதிரி மூஞ்சை வச்சுக்கிட்டு, இப்படி வில்லியா இருக்காளேன்னு மனசுக்குள்ள சொல்லிக்கறான் சஞ்சய்.