நிலா சீரியலிலே எபிசோடுக்கு எபிசோட் ட்விஸ்ட் வைக்கறாங்கப்பா!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியல் இன்றைய தேதிக்கு ரொம்ப நல்லாவே இருக்கு. இன்னும் பல விஷயங்களில் சஸ்பென்ஸ் நீடிப்பதால் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கு.
தன் மகன் சஞ்சய்க்கு நிலாவை கட்டி வச்சிடணும்னு, நிலா அம்மாகிட்ட பேசி நீலாம்பரி சம்மதம் வாங்கிடறாங்க.
நிலாவிடம் உன்னை சஞ்சய்க்கு பேசுவது போல பேசி காதலனுடன் சேர்த்து வைக்கறேன்னு நிலாவையும் நம்ப வைக்கறாங்க.
இந்த சமயத்துலதான் சஞ்சய் நிலாவை பாருக்கு அழைச்சுட்டு போயி பெரிய பிரச்சனை ஆகிறது.நிலாவை சஞ்சய்க்கு தர மாட்டேன்னு நிலாவின் அப்பா சொல்லிடறார்.
அடுத்து இன்னொரு யோசனைக்கு தயாராகி தம்பி அசோக்கை அழைச்சுட்டு நிலா வீட்டுக்கு போறாங்க. நிலா அப்பாகிட்ட ,என் தம்பிக்கு நிலாவை ரெண்டாம் தாரமா குடுங்கன்னு சொல்லி கேட்கறாங்க.
நிலா அப்பாவுக்கு கோவம் வந்துருது, சம்மதிக்க மறுக்கறார் .நீலாம்பரியின் தம்பிக்கும், தங்கைக்கும்கூட இது பிடிக்கவில்லை. நீலாம்பரி வீட்டு வேலைக்காரி நிலாவை தனியாக சந்தித்து, சஞ்சய்க்கு உங்க அப்பா பொண்ணு தர மாட்டேன்னு சொல்லிட்டாரில்லையா...
அதனால ,அவங்க தம்பிக்கு ரெண்டாம் தாரமா பொண்ணு கேட்டு உங்க வீட்டுக்கு வந்திருக்காங்கன்னு சொல்ல, நிலா நம்பியதாகத் தெரியவில்லை..நீலாம்பரி மறுபடியும் தன்னை கார்த்திக்குடன் சேர்த்து வைக்க இப்படி டிராமா போடுவாங்கன்னு நினைக்கறாளோ என்னவோ..
குஷ்பூ வீட்டுல குளுகுளு தோட்டமாமே... நமக்கும் காட்டுவாரா!
நிச்சயமா இதை நிலாகிட்ட டிராமா மாதிரி பண்ணி,சஞ்சய்க்கு கல்யாணம் பண்ணி வைக்க திட்டம் போடுவாங்க.நிலாதான் எனக்கு மருமகன்னு சபதம்போட்டு இருக்காங்களே...