ஐயையோ... சஞ்சய் கிட்ட நிலா தங்கச்சி ஸ்வேதா மாட்டிக்கிட்டாளே...!
சென்னை: சன் டிவியின் மதிய நேர சீரியல்களில் நிலா சீரியல் ரொம்ப நல்லாருக்கு.நிலாவை பார்ப்பதைவிட நீலாம்பரியை பார்ப்பதை பலர் விரும்பறாங்க.
நிலா காதலனுடன் சேர்வாளா, இல்லை நீலாம்பரி தன் மகன் சஞ்சய்க்கு கல்யாணம் பண்ணி வச்சுருவாங்களான்னு எதிர்பார்ப்பில் போயிகிட்டு இருக்கு.
நிலா நீலாம்பரி வீட்டில் இருக்க, நிலாவின் வீட்டில் யாருமே இல்லாமலிருக்க அவ தங்கச்சி ஸ்வேதா தனியா இருக்கா. காதலன் சஞ்சய்க்கு போன் செய்து, நான் தனியா வீட்டுல இருக்கேன். போரடிக்குதுன்னு சொல்றா.
என்னாங்க செம்பாவை இந்த பாடு படுத்தறீங்க... நம்பிக்கை வேணாமா...!
சஞ்சய்க்கு அவள் தனியா இருக்கேன்னு சொன்னது குஷி மூடை உண்டாக்குது. உடனே ஓ தனியா இருக்கியா..வரேன் இருடீன்னு சர்பிரைஸா கிஃப்ட் வாங்கிட்டு வர்றான்.
வீட்டுக்குவந்து கதவைத் தட்ட, ஸ்வேதா யாரு யாருன்னு கேட்கறா. பதில் இல்லை... உடனே கதவைத் திறந்து தேடறா..சஞ்சய் அந்த நேரம் பார்த்து அவளுக்கு தெரியாம உள்ளே வந்துடறான்.
அவளை மடியில உட்கார வச்சு மெதுவா அவளை முத்தமிடறான். கழுத்து பக்கம் போயி வாசம் பிடிக்க தள்ளி விட்டுட்டறா ஸ்வேதா.எனக்கு உன்மேல கோவம்னு சொல்றா.
என்ன கோவம்னு கேட்கறான் சஞ்சய்... உனக்காகத்தான் நான் பாருக்கு வந்தேன்.. குடிச்சேன்,,டான்ஸ் ஆடினேன்.. ஆனா, என்னை நீ கண்டுக்கவே இல்லை. நிலா பின்னாலதான் ஒடினேன்னு சொல்றா.
அது சும்மா நடிப்பு டார்லிங்...அம்மாகிட்ட பணம் வாங்கற வரைக்கும் அப்படித்தான் நடிக்கணும்னு சொல்றான். சரி உனக்கு டிரஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் பாருன்னு சொல்றான். அவ பார்த்துட்டு நல்லாருக்கு, ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்றா.
போயி இந்த டிரஸை போட்டுக்கிட்டு வான்னு சொல்றான். அவ ஆசையா போறா.. இவன் பின்னால போக தயாரா இருக்கான். எனன நடக்கப் போவுதோ...