பாவம் நிலா ரேவதியை எடுத்தெறிஞ்சு பேசறாளே... அவங்கதானே பெத்த அம்மா!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியல் நாயகி நிலா காதலன் கார்த்திக்குடன் ஹைதராபாத் போனவ, புருஷனா அசோக் கையைப் பிடிச்சுக்கிட்டு நீலாம்பரி வீட்டுக்கு மருமகளா வர்றா.
நீலாம்பரிக்கு இன்ப அதிர்ச்சி... ரகசியத்தை மறைச்சு வச்சு பெண்ணை தூரத்தில் வச்சு அழகு பார்க்கும் ரேவதிக்கு கோவத்தில் அதிர்ச்சி.
நிலாவின் வளர்ப்பு அப்பா ராஜசேகருக்கு நம்ம நிலாவா இப்படின்னு நம்ப முடியாத அதிர்ச்சி.வளர்ப்பு அம்மாவுக்கு இன்ப அதிர்ச்சி.
பணக்கார பொண்ணுங்க இன்னுமா இப்படிப்பட்ட ஆட்டிடியூடுல இருப்பாங்க... உலகம் தெரியாதா?
விருந்து வளர்ப்பு அம்மா
வளர்ப்பு அம்மா நிலாவையும் மாப்பிள்ளை அசோக்கையும் விருந்துக்கு கூப்பிடறாங்க.ரெண்டு பேரும் கிளம்பி போக, நிலா நகை எதுவும் இல்லாமல் கிளம்பறா. நீலாம்பரி வந்து நிலா இந்த நகைகள் எல்லாத்தையும் போட்டுகிட்டு போன்னு சொல்றாங்க.
நகையை நிலா போடும்போது
நிலா நகையை போட்டுக்கிட்டு இருக்கும்போது ரேவதி ஜூஸ் குடுக்க வந்தவங்க...நிலாவை திட்டறாங்க. உன்னை எவ்ளோ நல்ல பொண்ணுன்னு நினைச்சேன். பணக்கார குடும்பத்தை பார்த்ததும் இப்படி மனசு மாறிட்டியா?
கழுத்துல இருக்கும் தாலி
உன்னோட கழுத்துல இருக்கும் தாலி வேற ஒருத்தி கழுத்திலிருந்து புடுங்கிப் போட்டு இருக்கும் தாலி.. அது உனக்கு உறுத்தலையான்னு கேட்கறாங்க. இதோ பாருங்க நீங்க ரொம்ப எல்லை மீறி பேசறீங்கன்னு நிலா சொல்ல, உன்னைப் போயி என் வயித்துலன்னு சொல்லிட்டு அப்படியே நிறுத்திட்டு, மாத்தி பேசறாங்க.
அப்பப்போ தேவைகளை
பாருங்க நீங்க லிமிட் கிராஸ் பண்ணி போயிகிட்டு இருக்கீங்க...நீங்க இந்த வீட்டு வேலைக்காரி.. சாப்பாடு சமைக்கறது.. அப்பப்போ ஜூஸ் குடுக்கறதுதான் உங்க வேலை. இந்த அட்வைஸ் பண்ற வேலை எல்லாம் வச்சுக்காதீங்கன்னு சொல்றா.ரேவதி பாவம் அழுதுகிட்டு நிக்கறாங்க. பெத்த தாயாச்சே..மெல்லவும் முடியலை முழுங்கவும் முடியலை...