நிலா சோறுன்னா என்னா.. நிலா வெளிச்சத்தில் சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே...!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் தம்பதிகளான ஜனனியும், சந்தோஷும் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருந்தாலும் விவாக ரத்து எனும் முடிவை எதிர்நோக்கி காத்து இருக்கிறார்கள்.
சந்தோஷ் சக்தின்னு ஒரு பெண்ணை காதலிச்சு இருக்கான்.அவளை அவளோட அம்மா அப்பா சந்தோஷிடம் இருந்து பிரிச்சு அழைச்சுட்டு போயிடறாங்க.
சந்தோஷுக்கு ஜனனியோட கல்யாணம் ஆகிறது.சந்தோஷுக்கு ஜனனியோட வாழவும் முடியலை. சக்தியை மறக்கவும் முடியலை.
பாருங்கள் கேளுங்கள்.. பற்பல குரல்கள்... ஒன்று சேர்ந்து ஒரே மேடையில்...!
ஃபார்மாலிட்டீஸ்
டைவர்ஸ் பண்ணலாம்னு போனா ஆயிரத்தெட்டு ஃபார்மாலிட்டீஸ்...ஜனனி நொந்து போயிடறா.. சந்தோஷை பிரிய கூடாதுன்னும் நினைக்கறா. எதையும் மனசுவிட்டு பேச முடியலை.
கை பக்குவம்
வீட்டில் எல்லாருக்கும் ஜனனியை பிடிச்சு போகுது. விதவிதமா சமைச்சு போட்டதில் மாமனார் மனைவியின் கை பக்குவம் ஜனனிக்கு வந்துட்டதா சொல்றார்.
அப்டீன்னா என்ன
இந்த சமயத்துலதான்... இந்த வத்த குழம்பு சாதத்தை நிலா சோறா சாப்பிட்டா ரொம்ப நல்லாருக்கும்னு சொல்றா ஜனனி. நிலா சோறா அப்டீன்னா என்ன அண்ணின்னு கேட்குது நாத்தனார்.
நிலா சோறு
பவுர்ணமி அன்னிக்கு சாப்பாட்டை மொட்டை மாட்டி அல்லது முற்றத்துல வச்சு வெட்ட வெளியில சாப்பிடறதுதான் நிலா சோறுன்னு சொல்றா ஜனனி.
ஒவ்வொருத்தர் கையிலயும்
அண்ணி..அப்டீன்னா இன்னிக்கு சாப்பிடலாம் அண்ணின்னு சொல்ல எல்லாரும் மொட்டை மாடியில வட்டமா உட்கார்ந்துக்கறாங்க. ஜனனி பெரிய கிண்ணத்தில் மொத்தம் சோறை போட்டு, அதுல வத்த குழம்பை ஊத்தி பிசைஞ்சு கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு உருண்டையா பிடிச்சு ஒவ்வொருத்தர் கையிலயும் தர்றா.
நிலா சோறு
இந்த நிலா சோறை சந்தோஷமா சாப்பிட்டுட்டு மொட்டை மடியிலேயே எல்லாரும் படுத்து தூங்கறாங்க... நீங்க சாப்பிட்டு இருக்கீங்களா நிலா சோறு... விருப்பப்பட்ட எந்த சாப்பாடு வேணும்னாலும் சாப்பிடலாம்... நிலா வெளிச்சத்தில்!