நம்ம டிராமாவுக்கு இவ ஸ்கிரிப்ட் எழுதறாளே... விட்டா கிளைமேக்ஸும்...!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நீலாம்பரிக்கு நிலா ஆப்பு வைக்கற மாதிரியான எபிஸோட்ஸ் இப்போதைக்கு போயிகிட்டு இருந்தாலும் நீலாம்பரி எப்ப வேணும்னாலும் விழிச்சுக்குவாங்க.
நிலாவை எதுக்காக பழி வாங்க நினைக்கறாங்க நீலாம்பரின்னு இன்னும் தெரியாத சூழலில்தான் சீரியல் நகருது. நீலாம்பரியின் தம்பி பொண்டாட்டி நீலாம்பரி போட்டோவைப் பார்த்துட்டு, என்னை விட்டுருங்க.. என்னையும், என் குழந்தையையும் அவ கொலை செய்துடுவான்னு சொல்றாங்க.
இந்த புதிருக்கான விடையும் போகபோகத்தான் தெரிய வரும். குறிப்பா எதனால நீலாம்பரியின் தம்பி பொண்டாட்டி பைத்தியம் ஆனாங்கன்னும் தெரிய வரும்.
சின்ன கவுண்டர்... நாட்டாமை... இப்போ எஜமானும் வந்தாச்சுங்கோ....
வீட்டில் நீலாம்பரி
திடீர்னு நீலாம்பரி நிலா வீட்டுக்கு வர, நிலாவின் அம்மா, என்ன சம்பந்தி திடீர்னு வந்திருக்கீங்க.நிலா வீட்டுலதான் இருக்காளான்னு பார்க்க வந்தீங்களான்னு கேட்கறாங்க. இல்லை.. நிலாதான் என்னை வர சொன்னான்னு நீலாம்பரி சொல்ல, நிலா வர சொன்னாளா..எதுக்குன்னு கேட்கறாங்க அம்மா.
நகைக் கடைக்கு
நிலா ஒரு நெக்லெஸ் வேணும்னு ஆசைப்பட்டா.. நான் வாங்கித் தரேன்.. கிளம்பி இருன்னு சொன்னேன்னு நீலாம்பரி சொல்றாங்க. உடனே அங்கு நிலா வர, என்ன நிலா இது.. ஏதாவது நகை ஆசைப்பட்டா என்கிட்டே கேட்க கூடாதா, சம்பந்தி அம்மாகிட்ட கேட்பியா.. என்ன கெட்ட பழக்கம் இதுன்னு அம்மா சத்தம் போடறாங்க. விடுங்க என் மருமகளுக்கு நான் வாங்கித் தரேன்.. இதுல என்ன இருக்கு.. கிளம்பு நிலா போலாம்னு சொல்றாங்க.
காதலன் கார்த்திக்
நிலா எப்பவும் நான் வாங்கற ஜ்வெல்லரிக்கு போயி நகை வாங்கலாமான்னு கேட்கறாங்க நீலாம்பரி. இல்லை ஆன்ட்டி.. கார்த்திக் டிஸ்சார்ஜ் ஆகறப்போ, நான் இருக்கணும்னு நினைக்கறேன் ஆன்ட்டின்னு நிலா சொல்ல, சரி நிலா உன் இஷ்டம்னு சொல்றாங்க நீலாம்பரி.
பளார்
ஆன்ட்டி.. இங்கேயே உட்கார்ந்து இருங்க..நான் போயி கார்த்திக்கை கூட்டிகிட்டு வரேன்னு சொல்றா. இரு கன்னத்திலும் பளார் பளார்னு அறைவிட்டு, ஏண்டி எவ்ளோ தைரியம் இருந்தா வரும்கால மாமியார்கிட்டயே காதலனை பார்த்துட்டு வருவேன்னு சொல்லுவே..வீட்டுக்கு வாடின்னு நீலாம்பரி சொல்ல...ஆன்ட்டி.. என்ன அப்படி பார்த்துகிட்டு நிக்கறீங்க.. நான் கார்த்திக்கை அழைச்சுட்டு வரேன் ஆன்ட்டின்னு மறுபடியும் சொல்றா நிலா. பார்த்தா பளார் பளார் விவகாரம் நீலாம்பரியின் கற்பனை.
ரூம் வரைக்கும்
கார்த்திக்கை அழைச்சுட்டு நிலா வந்து நிக்கறா. கார்த்திக்.. உங்க ரூம் எங்க இருக்குன்னு சொல்லு, காரிலேயே உன்னை டிராப் பண்ணிட்டு போறோம்னு சொல்றாங்க நீலாம்பரி.இல்லை ஆன்ட்டி.. நான் ஒரு ஆட்டோ புடிச்சு விட்டுட்டு வீட்டுக்கு போறேன்னு சொல்ல, நிலா உன்னை உன் வீட்டுலேர்ந்து நான்தான் அழைச்சுட்டு வந்தேன். நானே உன்னை வீட்டுல கொண்டு போயி விட்டுடறேன்னு சொல்றாங்க.
பொய்
இல்லை ஆன்ட்டி.. உங்களுக்கு எதுக்கு வீண் கஷ்டம்னு நிலா சொல்ல, உங்க அம்மா கிட்ட என்ன சொல்லுவே நிலான்னு நீலாம்பரி கேட்கறாங்க. ஆன்ட்டிக்கு ஒரு பிசினெஸ் மீட்டிங் இருந்துச்சு, அதனால அப்படியே போயிட்டாங்க. இன்னொரு நாளைக்கு நகை வாங்கித் தரேன்னு சொன்னாங்கன்னு சொல்லிடறேன்னு நிலா சொல்றா. நீ ரொம்ப பிரில்லியன்ட் நிலா.. அடுக்கடுக்கா பேசி சமாளிக்க வருதேன்னு நீலாம்பரி நக்கல் செய்ய, இல்லை ஆன்ட்டி.. நான் எப்பவும் பொய் சொல்ல மாட்டேன்..இப்போ கட்டாயத்துல இருக்கேன்னு நிலா சொல்றா. நீ தப்பா நினைக்காத நிலா.. பிரில்லியன்ட்டா இருக்கேன்னுதான் நான் சொன்னேன்னு சொல்ல, நிலா கார்த்திக்குடன் கிளம்பறா.
நிலா ஸ்கிரிப்ட்
என்னை இப்படி யாரும் அவங்க வழிக்கு இழுத்ததில்லை.. காதலனை பார்க்க இந்த நிலா இப்படி பண்றாளே.. நாம டிராமா போட்டா இவ என் டிராமாவுக்கு ஸ்கிரிப்ட் எழுதறாளே.. விட்டா கிளைமேக்ஸும் இவளே எழுதிடுவா போலிருக்கே.. இனிமே இவளை விட கூடாதுன்னு தனக்குள்ள பேசிக்கறாங்க நீலாம்பரி.