பாக்கியலட்சுமி காதலை சொல்லும் வாய்ப்பு இல்லாம பண்ணிட்டாங்களேய்யா....!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் பாக்கியலட்சுமி இப்போதைக்கு ரவியிடம் காதலை சொல்லும் வாய்ப்பே இல்லாம் செய்துட்டாங்க . பாக்கிய லட்சுமியின் அண்ணி.
பாக்கியலட்சுமியை அவள் வேலை செய்யும் மகாலட்சுமி வீட்டில் விட்டுட்டு இருக்கறது நல்லா இல்லை. அக்கம் பக்கத்தவர்கள் பலதும் பேசறாங்கன்னு .புருஷன் கிட்ட சொல்லி, அவளை வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துட சொல்றாங்க அண்ணி.
பாக்கிய லட்சுமியின் தாத்தாவுக்கு இதில் இஷ்டம் இல்லை.நீயே போயி மகா அம்மாவைப் பார்த்து பேசி பாக்கிய லட்சுமியை இங்கே அழைச்சுட்டு வந்துருன்னு தாத்தா சொல்றாங்க.
பாக்கியலட்சுமியை மகா
பாக்கிய லட்சுமியை மகா தன் வீட்டிலிருந்து அழைச்சுட்டு போக சம்மதிக்க மாட்டேன்னு சொல்றாங்க... சென்டிமெண்டா பேசி..பாக்கியலட்சுமி எங்க வீட்டு பொண்ணு மாதிரி.அவளை நான் நல்லா பார்த்துக்குவேன்னு சொல்லி பேசறாங்க. அண்ணனும் மனசு மாறி தங்கச்சியை கூப்பிடாம வந்துடறான். மகாலட்சுமி அம்மா ரொம்ப ஃபீல் பண்ணினாங்க தாத்தா...நான்தான் தப்பு செய்துட்டேன்னு புலம்பறான்.
பாக்கிய லட்சுமி இனி
பாக்கிய லட்சுமி இனி மகா வீட்டுலதான் இருப்பா...அவளை நான் நம்பறேன்னு சொல்றான்.தாத்தாவும் என் வளர்ப்பு பாக்கிய லட்சுமி..அவ ஒரு போதும் என்னை மீறி எந்த தப்பும் செய்ய மாட்டா.என் பேரை கெடுக்க மாட்டா..எனக்கு நம்பிக்கை இருக்குன்னு தாத்தா சொல்ல,நானும் என் தங்கச்சியை நமபறேன் தாத்தா..அதான் அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன்..மகா அம்மா பொறுப்பில்தான் அவ இருக்கான்னு சொல்றான்.
இருங்க இப்படியே
இப்படியே நம்பிகிட்டு இருங்க..ஒரு நாளைக்கு அந்த வீட்டு பையன் ரவியோட அவ எங்காவது ஓடிப்போகப் போறான்னு அண்ணி சொல்ல,புருஷன் அவளை அடிக்கறான்.தாத்தா சமாதானப்படுத்தி .அனுப்பி வைக்கறார்.
தாத்தாவிடம் சத்தியம்
ஏற்கனவே தாத்தாகிட்ட உங்க நல்ல பேருக்கு களங்கம் வராம நடந்துக்குவேன் தாத்தான்னு பாக்கியலட்சுமி தாத்தாவுக்கு சத்தியம் செய்து கொடுதிருக்கா. அதனாலதான் ரவியிடம் காதலை சொல்லாம மறைச்சுக்கிட்டு இருக்கா.இனி சுத்தமா .தன் மனசுக்குள்ளேயே காதலை போட்டு புதைச்சுக்குவா பாக்கியலட்சுமி.