அச்சச்சோ..உண்மை தெரிஞ்சுருச்சே.. இனி ரோஜா அர்ஜுன் பிரிவா..ரொமான்ஸ் போச்சே!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் மதிய நேரத்துலதான் முதலில் ஒளிபரப்பாகிட்டு இருந்துச்சு. நல்ல ரேட்டிங்க்ஸ் ஏறிப்போனதுனால சன் டிவி நிர்வாகம் இரவு நேர பிரைம் டைமுக்கு இந்த சீரியலை மாத்தி குடுத்தது.
ரோஜாவும், அர்ஜுனும் ஒரு வருஷ கான்ட்ராக்ட் போட்டு, கல்யாணம் பண்ணிக்கறாங்க. அதுக்குப் பின்னால டைவர்ஸ் பண்றதுக்கு பத்திரத்துலயும் கை எழுத்து போட்டுடறாங்க. இது வீட்டில் இருந்தா பாதுகாப்பு இல்லைன்னு அர்ஜுனும், ரோஜாவும் நினைக்கறாங்க.
ரோஜா ஃபிரண்ட் ஒருத்திகிட்ட, இதை குடுத்து பத்திரமா வச்சுக்க சொல்லலாம்னு ஆஸ்பத்திரியில வேலை செய்யறா.. அவளை பார்க்க ரோஜா போறா. இதை பார்த்த ரோஜாவின் அத்தை கல்பனா, என்னை இங்கேயே இறக்கி விட்ருங்க..ரோஜா இந்த ஆஸ்பத்திரிக்கு ஃபிரண்டை பார்க்க போறா போலருக்கு. நான் அவ கூடவே வீட்டுக்கு போறேன்னு சொல்றாங்க.
கடைசியில நிலா எங்கேஜ் மென்ட் மோதிரத்தை சுட்டது தங்கக்ச்சியா.. .நல்ல கதை!
தோழியிடம் பாத்திரம்
ரோஜா தன் தோழிகிட்ட, அர்ஜுனும் நானும் ஒரு வருஷ கான்டிராக்ட் மேரேஜ்தான் பண்ணிக்கிட்டோம். இந்த சர்டிஃபிகேட் வீட்டில இருந்தா பாதுகாப்பு இல்லைன்னு உன்கிட்ட குடுத்து வைக்க நானும் அர்ஜுன் சாரும் முடிவு பண்ணிணோம்ன்னு பேசிகிட்டு இருந்ததை ரோஜாவின் அத்தை கல்பனா கேட்டு அதிர்ச்சியாறாங்க.
நடந்து கோயிலில்
தனியா நடந்து கோயிளுக்கு போறாங்க. என் மகன் வாழ்க்கையை இப்படி ஆகிருச்சே..அவன் செய்தது குலத்துக்கே பாவமாச்சேன்னு அழறாங்க. கோயிலில் நெருப்புக்கு இடையில் உட்கார்ந்து குடும்பத்தை பிடிச்ச பாவத்தை அக்னி பகவான் போக்கிடணும்னு வேண்டிக்கிட்டு உட்கார்ந்துடறாங்க.
சுத்தி நெருப்பு
சுத்தி வளையமாக அக்னி எரிய, கல்பனா கண்களை மூடிக்கிட்டு நடுவுல உட்கார்ந்து இருக்காங்க. இதை பார்த்துட்ட தோழி ஒருத்தி அர்ஜுனுக்கு போன் செய்து சொல்லிடறாங்க. அர்ஜுனும், ரோஜாவும் அவசரமா வந்து பார்த்தா நெருப்புக்கு நடுவுல கல்பனாம்மா.
நீரில் அக்கினியை
அர்ஜுன் பதறிபோயி கோயில் குளத்துல தண்ணி கொண்டு வந்து அக்னியை அணைக்கறான். கல்பனா கண் விழிச்சு பார்க்க, என்னம்மா இதுன்னு கேட்கறான் அர்ஜுன். மவுனமா இருக்காங்க கல்பனா.
இனி ரோஜா, அர்ஜுன் நிலைமை என்னவாகுமோ... நடிப்புக்காக ஓவர் ரொமான்ஸை கொட்டிக்கிட்டு இருந்தாங்க.. இனி ரொமான்ஸ் இருக்காதுங்கோ..