ரோஜாவுக்கு அநியாயம் நடக்குதே கேட்பார் யாரும் இல்லையா? இது தகுமா...?
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் கோபி கேரக்டர் இல்லாமல், ஆனால், கோபியை மையமா வச்சு அவரை சுற்றியே கதை நகருது.
ரோஜா ராஜா மேல தீரா காதல் வச்சிருந்து, அவன் இவளை உதாசீனப் படுத்த ரோஜா பலப்பல சதிகளை செய்யறா.
ஆனா, அவளோட நோக்கம் ராஜாவை கல்யாணம் செய்துகிட்டு சந்தோஷமா வாழணும் அவ்ளோதான்.
தெய்வானை மேல சண்முகத்துக்கு ஆசையா இல்லை... அருந்ததிக்கு ஆசையா?
ரோஜா ராஜா மேல்
ரோஜா ராஜாவின் மீது வைத்த காதல் சிம்பிள்தான். ஆனா, அதை வெளிப்படுத்திய போது, ராஜா... நீ எனக்குத் தகுதியானவளே இல்லைன்னு முகத்தில் அடிச்ச மாதிரி சொல்வதில் ஆரம்பமாகுது ரோஜாவின் வெறித்தனம். அது மட்டுமா... வீட்டுக்கு ரோஜாவின் அக்காதான் சூர்யா என்று தெரியாமலே வந்து பெண் பார்த்துட்டு, சூர்யாவை பிடிச்சு போகுது ராஜாவுக்கு , இதில் இன்னும் கோபம் ஆகிறாள் ரோஜா.
சூர்யா ரோஜா
ராஜா சூர்யாவைத்தான் கல்யாணம் செய்துக்கணும்னு ஒத்தை காலில் நிற்க, சூர்யா கோபியை விரும்பறா. கோபியை நண்பனின் தங்கை ஸ்வேதாவும் விரும்பறா...இதை விடுங்க ரோஜா கதைக்கு வருவோம்.
ரோஜாவின் அதீத காதலால்
ரோஜாவுக்கு ராஜாவின் மீதுள்ள அதீத காதலால், பல கேடுகெட்ட வேலைகளை செய்கிறாள் ரோஜா. அதில் ஒன்றுதான் சூர்யாவை கேங் ரேப் செய்ய செல்வம் உள்ளிட்ட 4 நபர்களை அனுப்ப ஏற்பாடு செய்து, அந்த வலையில் இப்போது தானே மாட்டிக்கொண்டு செல்வத்தின் ஆட்களால் சின்னனா பின்னமாகிக் கிடக்கறா ரோஜா.
ராஜா தனக்கு சாதகமாக
ராஜா ரோஜாவின் இந்த நிலைமையை தனக்கு சாதகமாகப யன்படுத்தி ,சைக்கோ மாதிரி பல வேலைகளை செய்யறான்..ரோஜாவின் கடைசி ஆசை என்று ரோஜா கோபியை சூர்யா கல்யாணம் செய்துக்கணும்னு சொன்ன சைகைகளை தன்னை கல்யாணம் செய்துக்கச் சொல்றான்னு மாத்தி சொல்லிடறான். ஆஸ்பத்திரி கம்பவுண்டரை கைக்குள் போட்டுக்கிட்டு, ரோஜா எப்போதும் மயக்கத்தில் இலிருக்கும்படி செய்யறான்.
ரோஜா கிழிந்த நாராக
கிழிந்த நாராக கிடக்கும் ரோஜாவுக்கு ஆஸ்பத்திரியில் கூட போலீஸ் பாதுகாப்பு இல்லைங்க... மருத்துவ சிகிச்சையும் ஒழுங்காக இல்லை.. கதையில் இப்படி காண்பிச்சா நிஜத்தில் வேற எப்படி நடக்கும்.
இதை கொஞ்சம் கவனிச்சு பெரிய விஷயமா ஆக்கி, மக்களுக்கு விழிப்புணர்வையும், தவறு செய்பவர்களுக்கு பயத்தையும் உருவாக்குங்க சார்...