Pandian Stores Serial: எங்களுக்குள்ள பிரச்சனை இல்லைன்னு இப்போ நம்புங்க!
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை கதிருக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லையாம்.
சீரியல் கதைப்படி இருவரும் நல்ல தம்பதியர்தான்.. நிஜத்தில் இருவருக்குள்ளும் ஏதோ பிரச்சனை ஓடிக்கிட்டு இருக்குன்னு எல்லாரும் சொன்னாங்க.
இப்போ ஒருவருமே ஒரு பிரச்சனையும் இல்லைன்னு இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு உரக்க சொல்லி இருக்காங்க.
அடிதடி ரொமான்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடிதடி வில்லி, வில்லன் என்பதெல்லாம் கதைக்கு எப்படி ஒவ்வாமையாக இருக்கிறதோ அப்படி அப்பட்டமான ரொமான்ஸ் காட்சிகளும் இருப்பதில்லை. தம்பதியர் அன்யோன்யமாக இதமாக பேசிக் கொள்வதுதான் அவ்வப்போது இருக்கும்.
கதிர் முல்லை
இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸில் அவ்வப்போது சுவாரஸ்யமாக போய்க்கொண்டு இருப்பதே முல்லை கதிர் இருவரின் அன்யோன்யமான பேச்சுக்களும். இருவரும் எப்போது நெருக்கமாவார்கள் என்கிற எதிர்பார்ப்பும்தான். ஒருவரையொருவர் தங்களிடம் பேசுவதையே ஆசையாக எதிர்பார்ப்பது. சீரியல் பார்ப்பவர்களையும் எதிர்பார்க்க வைத்துள்ளது.
நிஜத்தில் இருவரும்
சீரியலுக்கு அப்பாற்பட்டு நிஜத்தில் இருவரும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள். அண்மையில் நடைப்பெற்ற 500 வது எபிசோட் கொண்டாட்டத்தில் கூட இருவரும் முகம் கொடுத்து பேசிக்கொள்ளவில்லை என்று பலரும் பேசி வந்தார்கள். இதனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங் கூட இடைஞ்சலை சந்திப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
அனைத்தும் பொய்
அனைத்தும் பொய் என்று சொல்லும்படியாக என்று சொல்லிவிட முடியாது. ஆனால், அப்படி கொஞ்சம் நினைக்கும்படி குமரன் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில், சின்ன சின்ன சண்டைகள் நட்புக்குள் இருப்பது சகஜம்தான் என்பது போலவும், அது சமாதானம் ஆவதும் சகஜம்தான் எனப்து போலவும் கூறி உள்ளார்.
இவருடன் முல்லையாக நடிக்கும் சித்ராவும் உள்ளார்.எனவே இவர்கள் இருவருக்குள்ளும் எந்த பிரச்சனையும் இல்லை என்று இவர்கள் சொல்வதை இப்போதாவது நம்புவோம்.