For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு வருஷத்துக்கு மேல ஆகியும் 'அது" நடக்கலியாமே... பாவம் அந்த பொண்ணு!

Google Oneindia Tamil News

சென்னை:சன் டிவியின் நாயகி சீரியல் எந்த தொய்வும் இல்லாம ரொம்ப நல்லா சரியான நேர்கோட்டுல பயணிச்சுக்கிட்டு இருக்கு.

இந்த சீரியலின் நாயகி ஆனந்திக்கு கண்மணி உயிருக்கு உயிரான தோழி. ஆனந்தி திருவை காதலிச்சு, போராட்டம், சண்டைன்னு எல்லாம் முடிஞ்சு திருவை கல்யாணம் பண்ணிக்கிட்டா.

இதுல முதலிரவு நடக்க கூடாதுன்னு திருவின் அப்பா, தங்கை, திருவின் மேல ஆசைப்பட்ட அனன்யா எல்லாரும் சதி செய்தும், ரெண்டு பேருக்கும் முதலிரவு நடந்து இப்போ ஆனந்தி முழுகாம இருக்கா.ஆனா, புருஷன் திருவுக்கு இதை தெரிவிக்க முடியாத நிலை ஆனந்திக்கு.

பாக்கிய லட்சுமிக்கு இந்த கூல் ட்ரிங்க்ஸ்தான் பிடிக்குமாமே...அடடே ரவி ஏமாந்துட்டானே! பாக்கிய லட்சுமிக்கு இந்த கூல் ட்ரிங்க்ஸ்தான் பிடிக்குமாமே...அடடே ரவி ஏமாந்துட்டானே!

உண்மை, நேர்மை

உண்மை, நேர்மை

கண்மணியை செழியன் லவ் பண்ணி இருந்தாலும், அம்மா பேச்சை தட்ட முடியாம சுகாசினியை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொல்றான். சுகாசினி நல்ல பொண்ணு இல்லைன்னு தெரிஞ்சு கண்மணி கல்யாணத்தை நிறுத்த, தன்னை செழியன் கெடுத்துட்டதா பொய் சொல்லி கல்யாணம் செய்துக்கறா .

பிடிக்கலை செழியனுக்கு

பிடிக்கலை செழியனுக்கு

பொய் சொல்லி கல்யாணம் செய்துகிட்ட கண்மணியை புடிக்கலை செழியனுக்கு. முதலில் மாமியார் சற்குணத்துக்கும் பிடிக்காமல் இருக்க, இப்போது வீட்டுக்கும் பிடித்த மருமகளாயிட்டா கண்மணி. இருந்தாலும் என்ன மாயம், மந்திரம் செய்தாலும் புருஷன் மட்டும் கண்மணியை நெருங்கலை

கண்மணி பொய்

கண்மணி பொய்

கல்யாணமாகி ஒரு வருஷமாக போவுது.. இன்னும் மருமக வயித்துல ஒண்ணும் இல்லையான்னு எல்லாரும் கேட்க, கண்மணி கர்ப்பம் மாதிரி நடிக்கறா. என்ன இருந்தாலும் இவளுக்கு சதி செய்ய கூடவே வீட்டில் இருக்கா சுகாசினி.

கூட்டு சதி

கூட்டு சதி

சுகாசினி தன் இஷ்டத்துக்கு செழியன் தம்பி, அல்லது செழியன் கூட சேர்ந்து கண்மணியை வீட்டை விட்டு விரட்ட பிளான் பண்ணிகிட்டே இருக்கா. கண்மணி மேல செழியனுக்கு அன்பு வரும் சமயம், சுகாசினி எதாவது செய்து கெடுத்து விட்டுட்டறா.

கண்மணி பாவம்

கண்மணி பாவம்

கண்மணி கடைசியாக புருஷன் கூட ஆசையா வெளியில போக, அங்கே சில பெண்களை செட் செய்து, கண்மணியின் அம்மா வேணும்னே சதி செய்து, சில பெண்களை செட் செய்து எதோ பேச வைப்பது போல சதி செய்துடறா சுகாசினி.

செழியன் பழி

செழியன் பழி


இந்த முறையும், சுகாசினியின் செட்டப் செய்ததை, கண்மணியின் அம்மா செய்ததுன்னு நினைச்சு கண்மணியை பாதியிலேயே இறக்கி விட்டுட்டு போயிடறான்.ரொம்ப வேதனையில் இருக்கா கண்மணி.

பாவம் கல்யாணமாகி ஒரு வருஷத்துக்கு மேல ஆகியும், அது நடக்கலேன்னா...பாவம் இல்லையா கண்மணி.

English summary
The nayagi serial of Sun TV is pretty much the right linear without any doubt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X