பாண்டியன் ஸ்டோர்ஸ் நஷ்டத்துல போவுதாம்ல... வீட்ல கூட வெறும் தயிர் சாதம்தேன்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்போ ரொம்ப நஷ்டத்துல போவுதாம்ல.. அவுக வீட்டுல தினம் தயிர்சாதம்.. உப்புமா..சாம்பார் இல்லாம இட்லி சட்னி மட்டும்தான்னு பேசிக்கிடுதாக.
அண்ணன், தம்பிங்க நாலு பேரும் சேர்ந்து அந்த ஊருலே பெரிய மளிகை கடையை வச்சு ஜோராத்தான் நடத்திக்கிட்டு வந்தாக. திடீர்னு பகையிலை சரக்கு வராம நின்னு போக.. ஏ...படிப்படியா கஷ்டம் வந்து இப்போ கடையே நஷ்டத்துல போவுதாம்ல..
கல்யாணத்துக்கு ஒருத்தர் பெரிய ஆர்டர் குடுத்தாவலாம்.. இதுல கொஞ்சமா கூட மத்த கஸ்டமரை நினைக்காம ரெண்டாவது தம்பி மொத்த சரக்கையும் அவுக வூட்டுல எறக்கிப் புட்டாக..
இப்போ, அண்ணன் சரக்கு கேட்க போனவரு இன்னும் நல்ல சேதியோட வர்லையாம்ல...வீட்டுல ஒரு நாளைக்கு வெறும் உப்புமாவும், சக்கரையும்.. ஒரு நாளைக்கு சாம்பார் இல்லாத இட்லி, சட்னி ஒரு நாளைக்கு தயிர் சாதம் மட்டும்தானாம்.
எல்லாம் நல்லா சாப்புட்டு வளர்ந்த புள்ளையளாச்சா.. மூஞ்சை சுழிச்சுகிட்டு கடைசி தம்பி சாப்பிடுறானாம். ரெண்டாவது மருமக மீனா பணக்காரி.. அவளுக்கு சுத்தமா இந்த சாப்பாடு புடிக்கிலியாம்ல..
பக்கவாத மாமியாருக்கு தயிர்சாதம் ஊட்டி விடுதாக தனம். முல்லை, மீனா ரெண்டு பேருமே தயிர் சாதம் சாப்பிட்டுக்கிட்டு இருக்காக. அத்த.. எனக்கு மட்டும்தான் தயிர் சாதம் ஊட்டறேன்னு நினைச்சேன்.. எல்லாருக்குமே தயிர்சாதம் தானான்னு கேட்கறாக.
அத்தை மருமகள் உறவு பலத்துக்கான அற்புத ஊடல்... அருமையான ஃபீலிங்!
ஆமா, அத்தைன்னு தனம் சொல்லுதாக.. அப்போ கடைக்குன்னு அத்தை கேட்க.. அவுகளுக்கும்தான் அத்தை..தயிர்சாதம்தான் வேணும்னு கேட்டாக நிறைய குடுத்திவிட்டேன் அத்தைன்னு சொல்றாக..
அவனுங்க சொன்னா அப்படியே விட்டுடறதா.. முட்டை, பொரியல், சாம்பார், ரசம், அப்பளம்னு குடுத்து விட்டாத்தானே வேலை செய்யறவங்களுக்கு சத்துன்னு மாமியார் சொல்ல மருமகளுக மூஞ்சை பார்த்துக்கறாக..
வீட்டு கஷ்டம் அத்தைக்கு தெரிய கூடாதாம்..அதுக்காவ.. நாளைக்கு குடுத்து விடறேன் அத்தைன்னு சொல்றாக மூத்த மருமக தனம். நஷ்டத்துல போற பாண்டியன் ஸ்டோர்ஸை தூக்கி நிறுத்திடுவாகளா..பார்ப்புமே...