ஏன் அண்ணாச்சி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டைமை மாத்தப் போறியளா!
சென்னை: அண்ணாச்சி.. இந்த சேதியைக் கேட்டியளா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் டைமை மாத்தப் போறாங்க போல.. கரெக்ட் டைமை பார்த்து சீரியல் பாருங்க அம்புட்டுதேன்.
இந்த கோராணா வந்தது தான் வந்தது மக்களின் வாழ்க்கையும் தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது. இது எல்லோருடைய வாழ்க்கையும் மொத்தமாக மாற்றிவிட்டது. யாரையும் விட்டுவைக்காமல் எல்லாருக்கும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.
அது சினிமா துறையினரையும் விட்டு வைக்கவில்லை. மக்களின் பொழுதுபோக்குகளை சினிமாக்கள்தான் அது முற்றிலுமாக தடைபட்டு விட்டது. வீட்டில் எல்லாரும் அடைந்து கிடக்கும் போது சினிமாக்காரர்களும் வீட்டுக்குள்ளே தான் இருக்கிறார்கள்.
லாக்டவுனால் வந்த குழப்பம்
லாக்டோன் போட்டதால் வேலை வெட்டி இல்லாமல் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள். டிவி சீரியல் படப்பிடிப்பு நடத்த தடை செய்யப்பட்டதால் இவ்வளவு நாளா எல்லா சீரியல்களிலும் எடுத்திருந்த எபிசோடுகளை இப்ப கொஞ்ச நாளாக ஒளிபரப்பிட்டு வந்தாங்க. இப்படியிருந்த இந்த சூழ்நிலையில்தான் இப்போ சீரியல்களுக்கு மட்டும் படப்பிடிப்பு ஏற்படுத்த அனுமதி கிடைத்திருக்கிறது.
சீரியல்கள் நிறுத்தம்
இது சின்னத்திரையில் உள்ளவர்களுக்கு பெரிய சந்தோசம் தான். அதேபோல மக்களும் தங்கள் மனதுக்குப் பிடித்த சீரியல்களை ஒளிபரப்புவதை நினைத்து சந்தோஷமாக தான் இருக்கிறார்கள். ஆனால் சில சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்ப முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சில சீரியல்களில் கதாநாயகிகளும் கதாநாயகர்களும் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
நடிக்க முடியாத நடிகர்கள்
அதில் முதலில் நடித்துக்கொண்டிருந்த நடிகர்கள் லாக்டோன் டைம்ல வேற மாநிலத்தை விட்டு இங்கு வர முடியாத சூழ்நிலையினால் இப்படி மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள். இருந்தாலும் ரசிகர்களுக்காக ரொம்ப தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் சீரியலாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருக்கிறது. இது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
மீண்டும் ஆரம்பம்
இந்த சீரியல் இப்போ மறுபடியும் ஷூட்டிங் ஆரம்பித்து விட்டது. இதில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தங்களுடைய இணையதளத்தில் இதற்கான போட்டோக்களை அப்லோட் பண்ணி வருகிறார்கள். இவ்ளோ நாளா இந்த சீரியல் எப்ப வரும்னு இருந்த மக்களுக்கு இப்போ 27ஆம் தேதி ஒளிபரப்பாக படும் என்று அறிவிப்பு வெளி வந்துவிட்டது. இருந்தாலும் அதில் சில மாற்றங்களையும் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இனி ஒரு மணி நேரம்
இதற்கு முன்னாடி இந்த சீரியல் அரைமணிநேரம் ஒளிபரப்பானது ஆனால் இனி ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்பட போகிறதாம். இது ரசிகர்களுக்கு நல்ல செய்திதான் இருந்தாலும் எந்த டைமில் ஒளிபரப்பாக போகிறார்கள் என்றுதான் இன்னும் தெரியவில்லையாம். எந்த டைம்ல ஒளிபரப்பாக போகிறோம் என்று டிவியிலிருந்து சொல்லாததால் ரசிகர்கள் ரொம்பவும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
துணி மடிக்காதீங்க
இணையதளத்தில் இது எந்த டைமில் ஒளிபரப்பப்படும் கெஸ் பண்ணி சொல்லுங்க போட்டிருக்கிறார்கள். இதற்கு ரசிகர்கள் கமெண்ட் பண்ணிக்கிட்டு இருக்கிறார்கள். அதில் சில ரசிகர்கள் சீரியல்களை கலாய்க்கிறார்கள். இந்த சீரியலில் பொதுவாக இதுவரைக்கும் வராண்டாவில் உட்கார்ந்துகொண்டு டீ குடிக்கிற மாதிரி சீன்களே அதிகமாக வந்ததாகவும் இல்லனா எல்லாரும் உட்கார்ந்து துணி மடிக்கிற சீனாகவும் தான் வந்துகிட்டு இருந்தது.
அரை மணி நேரமும் அதுதானா
இனி ஒரு மணி நேரம் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. அதுல வேற சீனையும் கொஞ்சம் காட்டுங்க அப்படின்னு ரசிகர்கள் கமெண்ட் பண்ணி இருக்கிறார்கள். இது ஒரு குடும்ப கதை என்பதால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டே இருப்பதிலேயே அரை மணி நேரமும் போய்விடுகிறதாம்.
ரசிகர்கள் செம கலாய்
அதுவும் இடத்தை கூட மாற்றாமல் ஒரே இடத்தில் தான் எப்பவும் உட்கார்ந்து டீ குடிச்சிட்டு பேசிக்கிட்டு இருக்காங்க அப்படின்னு ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்துத் தள்ளியுள்ளனர். ஆனால் இப்ப வரைக்கும் எந்த டைம்ல ஒளிபரப்பாக போகிறது என்று தெரியாமல் ரசிகர்கள் தவிக்கிறார்கள் ஒரு மணி நேரம் சீரியல் என்பது இவர்களுக்கு கொண்டாட்டம் தான்.. ஆனால் டைம்தான் சரியா சொல்ல மாட்டேங்காக அண்ணாச்சி!