இதைவிட அதிகமா சம்பாதிப்பேன்.... அப்ப உங்களுக்கு தர மாட்டேன்... பாண்டியராஜன் கலகல!
சென்னை: சன் டிவியின் லொள்ளுப்பா நிகழ்ச்சியில் நடிகரும் இயக்குநருமான பாண்டிய ராஜன் சிறப்பு நடுவராக கலந்துகொண்டார்.
இவருடன் நடிகை மீனாவும் கலந்துகொண்டார். ஸ்டேண்டப் காமெடி, கான்செப்ட் காமெடின்னு வாராவாரம் நிகழ்ச்சி களைக்கட்டும்.
தான் இயக்குனர் என்பதை விட, அசிஸ்டெண்ட்னு சொல்லிக்கவே ரொம்ப பெருமைப் படுவதாக சொன்னார். காரணம் உதவி இயக்குநரா சேர்ந்ததே மறக்க முடியாத சம்பவம் .. அதனாலதான்னு சொன்னார்.
ஏன்டா டேய்... உங்க டிக்டாக் வெறிக்கு அளவே இல்லையாடா.. சிரித்துப் பகிர்ந்த விவேக்!
நான் தூயவன் சார் கம்பெனியில டீ, வடை போண்டா வாங்கித்தரும் பையனா இருந்தேன். குருநாதர் பாக்கியராஜ் சார் அங்க வந்தப்போ, ஒரு பக்கம் காப்பிரைட் எழுதி குடுத்தேன்.
எழுத்து கொட்டை கொட்டையா அழகா இருக்கேன்னு சொன்னார். ஆமா.. சார் எனக்கு டைரக்ஷனில் ஆசை. உங்களுக்கு அசிஸ்டெண்டா வந்துடறேன்னு சொன்னேன்.
எனக்கு நிறைய பேர் இருக்காங்கப்பான்னு சொல்லிட்டார். அப்பவும் நான் விடலை.. அவங்க ஷூட்டிங் ஸ்பாட்லேயே சுத்திகிட்டு, எல்லாரையும் காக்கா புடிச்சுக்கிட்டேன்.
ஒரு நாள் கிளாப் சொல்லி கிளாப் அடிச்சேன். யாரது கிளாப் அடிச்சது புது குரலா இருக்குன்னு சொன்னார். நான்தான்னு எல்லாரும் சொல்ல, சட்டுன்னு கால்ல விழுந்துட்டேன்.
அப்பா இல்லாத பையன்.. என்னை அசிஸ்டென்டா சேர்த்துக்கங்கன்னு கெஞ்சினேன். உடனே சரின்னு சொல்லிட்டார்.
ஒரு நாள் ஒரு புரடியூசர் தந்த பணத்தை எண்ணிக்கிட்டு இருந்தேன் 'என்ன பாண்டியராஜன் இவ்ளோ பணம் வருது.. நமக்கு தர மாட்டேங்கிறாரேன்னு யோசிக்கிறியா?"ன்னு கேட்டார்.
இல்லை சார் இதைவிட அதிகமா நான் சம்பாதிப்பேன்.. அப்போ உங்களுக்கு தர மாட்டேன்னு சொன்னேன்.. அவரும் சிரிச்சுட்டார். என்றார். .