செம தில்லில் பட்டிக்காடா பட்டணமா பெண்கள்...!
சென்னை: சன் டிவியின் ஞாயிறு இரவு கேம் ஷோ பட்டிக்காடா பட்டணமா. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் ஒரு அணிக்கு நான்கு பெண்கள் வீதம் இரண்டு அணிகள்... எட்டு அழகான இளம் பெண்கள்.
எப்போதுமே சஞ்சனா சிங் டான்ஸ், கேம் ஷோ, ரியாலிட்டி ஷோக்கள் இதில்தான் கலந்து கொள்வார். பட வாய்ப்புக்கள் வந்தால் நடிப்பார்.
இதற்கு முன்பு சன் டிவி கிராமத்தில் ஒரு நாள் என்று நிகழ்ச்சி நடத்திக்கொண்டு இருந்தது. அப்போதும் அதில் கலந்துக்கொண்டு கலக்கியவர் சஞ்சனா சிங்.
கிழக்கு வாசல் இன்ஸ்பெக்டருக்கு கல்யாண ஆசை வந்துருச்சு...!
போட்டிகள் கடுமையானவை
இந்த பெண்களுக்கு தரப்படும் போட்டிகள் மிகவும் கடுமையானவைதான். இந்த முறை நட்பே துணைன்னு ஒரு கான்செப்ட். ஒரு நீச்சல் குளம்...பத்து அடி தள்ளி தடுப்புக்கள் நிறைந்த பாதை.மொத்தம் நன்கு தடுப்புக்களை தவழ்ந்து தவழ்ந்து சேற்றில் தாண்டி கடைசியில் இருக்கும் கொடியை எடுத்தால் வின்னர்.
எப்படி விளையாட்டு?
நீச்சல் குளத்தில் ஒருத்தர் தொங்குவார். அவரை மேலே தூக்கிவிடும் போட்டியாளர் இன்னொருவர் ,தவழ்ந்து தவழ்ந்து தடுப்புக்களை கடந்து சென்று கொடியைத் தொடும் போது ,அவரின் முதுகில் சுமையாக கோர்த்து விடப்பட்டு இருக்கும் தோழி.இவர் கொடியை நோக்கி முன்னேற முன்னேற மேலே போவார்.
சஞ்சனா ஒல்லிக்குச்சி
ஒல்லிக்குச்சி சஞ்சனா சிங் கிரிப்பாக தடுப்பை பிடித்துக்கொண்டு, முன்னேறி... காலை வைத்து உந்தி அடுத்த தடுப்புக்கு முன்னேற வேண்டும். இப்படி முன்னேற முன்னேற முதுகில் கோர்த்து நீச்சல் குளத்துக்கு மேலே தொங்கும் அவர்களது தோழி மேலே போவார்.இவரும் கொடியை எடுத்துவிடுவார்.
இதில் ஒல்லிக்குச்சி சஞ்சனா மிகக் குறைந்த நேரத்தில் டாஸ்கை செய்து வெற்றி பெற்றார்.
சில நடிகைகள்
சில சீரியல் நடிகைகள் டாஸ்க்கை மிகக்கடினமாக செய்து அழவும் செய்தார்கள்.கையில் காயம், அடி பட்டது, ரத்தம் கட்டிக்கிட்டது என்று கூறினாலும், ரொம்ப நல்லா இருந்தது என்றும் கூறினார்கள்.
கடைசியில் என்ன...ஜெயிச்சவர்கள், தோற்றவர்களை நீரில் தள்ளி தாங்களும் தண்ணீரில் குதிச்சு விளையாடினார்கள்.