செம்பான்னாலே திரு திருன்னு முழிக்கறாரே... பெரிய ஐயா...!
சென்னை: அதே ஊரில் பிறந்த செம்பாவின் அப்பாவும்,பெரிய அய்யாவும் நண்பர்கள். செம்பாவின் அப்பா இறந்த உடன், செம்பாவை வீட்டுக்கு வேலைக்காரியா அழைச்சுக்கிட்டு வர்றார்.
இங்கே வந்துதான் பெரிய அய்யாவின் இளைய மகன் கார்த்திக் செம்பாவை காதலிச்சு கல்யாணம் செய்துக்கறான். குலசாமி கோயிலுக்கு வந்தும்கூட திரு திருன்னு முழிச்சுகிட்டே இருக்கார் பெரிய ஐயா.
செம்பாதிரும்பி வரும்போது உண்மை தெரிஞ்சு அழுதுகிட்டே வர்றா... செம்பாவுக்கு உண்மை தெரிஞ்சு இருக்குமா..என்னை பத்தி என்ன நினைப்பான்னு பெரியவர் முழிச்சுகிட்டு உட்கார்ந்து இருக்கார்.
அவள் இடுப்பில் அழகு மச்சம்... இவன் கையில் சூலம் டாட்டூ!
பைத்தியம் இல்லை
பெரிய ஐயா குடும்பம் கிராமத்தில் பைத்தியம்னு சொன்னவர் பைத்தியம் இல்லை. செம்பாவின் சித்தப்பா...அவர் செம்பாவிடம் ஏதோ சொல்ல துடிக்கிறார்னு தெரிஞ்சு, பெரிய ஐயா அவனை கிட்டே நெருங்க விடாம செய்யறார். கடைசியில் திருவிழா நடக்கும் அன்று செம்பாவை நெருங்கி விடறார் சித்தப்பா.
அப்பா தானா சாகலை
செம்பா உன் அப்பா தானா சாகலை ..உன் மாமனார்தான் கொலை செய்துட்டார்.. உனக்கு இந்த பவுசு வாழ்க்கைதான் வேணும்..உன் அப்பாவைப் பத்தி கவலை இல்லைன்னா உன் வேலையை பார்த்துகிட்டு,அந்த குடும்பத்துக்கு சேவை செய்ய போன்னு சொல்றார்.
வேலையில் இருக்கும் போது
வேலை பார்த்தப்போ மாமனார் சிக்கலில் மாட்டிக்கிட்டார்... காப்பாத்தினது உன் அப்பாதான்..அவர் துடிதுடிக்க சாவதை பார்த்துட்டு சும்மா வந்தவர் உன் மாமனார்னு அவர் சொல்லிட்டு போயிடறார். என்னால இதை நம்ப முடியாது.. என் அப்பாவை பெரிய ஐயா கொன்னு இருக்கமாட்டார்னு அழறா செம்பா.
மாமனார் முகம்
வீட்டுக்கு வந்தும் மாமனார் முகம் ஒரு மாதிரிதான் இருக்கு. செம்பான்னாலே திரு திருன்னு முழிக்கிறார்.ஆனால்.. அவன் சொன்னதைத்தான் செம்பா நம்புவா..தான் சொல்றதை நம்பமாட்டாளே. .. இவ்ளோ நாள் ஏன் பெரிய ஐயா என்கிட்டே சொல்லலைன்னு கேட்பாளே என்ன செய்வேன்னு புலம்பறார் பெரிய ஐயா.
செம்பா எப்போதும் போல
செம்பா எப்போதும் போல தன் வேலைகளை செய்து கொண்டு இருந்தாலும்,அவளுக்கும் மனசுக்குள் உருத்தல்...பெரிய ஐயாவுக்கும் மனசுக்குள் உருத்தல்...என்ன நடக்கும்னு பார்க்கலாம்.