பாவம் பாரதி... படுத்தறா அஞ்சலி... எதுக்குடா கல்யாணம்!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியா நடிக்கற பொண்ணு ரொம்ப அழகாத்தான் இருக்கு. ஆனா, பார்க்கறவங்களுக்கு அதை பிடிக்காத மாதிரி அதுக்கான ரோல் அமைஞ்சு போச்சு.
அஞ்சலியை பார்த்தாலே பார்த்தாலே கடுப்பு கடுப்பா வருதுங்க. அஞ்சலியோட அழகுல மயங்கி பணக்கார அகிலன் அஞ்சலியை கல்யாணம் செய்துக்க ஆசைப்படறான்.
அகிலன் மாதிரியே அவன் அம்மாவும் அழகு விரும்பி. ஏழைப் பொண்ணா இருந்தாலும் அழகியா இருக்கா, பையனுக்கும் பிடிச்சிருக்கேன்னு கல்யாணத்துக்கு சம்மதிக்கறாங்க.
அஞ்சலிக்கு வீடு குடுத்து, அங்கே குடும்பத்தோட இருக்க சொல்றாங்க. ஆனா, இந்த பொண்ணுக்கு பாருங்க அகிலனை புடிக்கலியாம். அவன் அண்ணன் பாரதியைத்தான் புடிக்குதாம்.
அஞ்சலி பாரதியைப் பார்த்து லவ் டயலாக் விடறா, அதிர்ந்து போறான் பாரதி. அவளைத் தம்பி பொண்டாட்டியா பார்த்த பாரதி, இந்த கல்யாணத்தை நிறுத்தினா தம்பி மனசு உடைஞ்சு போவானேன்னு அஞ்சலியோட டார்ச்சரைப் பொருத்துக்கறான்.
பாக்கிய லட்சுமிக்கு இந்த கூல் ட்ரிங்க்ஸ்தான் பிடிக்குமாமே...அடடே ரவி ஏமாந்துட்டானே!
கடைசியில அஞ்சலி தான் பாரதியோட இருக்கற மாதிரி ஒரு போட்டோவை தயார் செய்து, அகிலன் கிட்ட காமிச்சு, உண்மையை சொல்லிடலாம்.. அகிலன் கிட்ட தான் பாரதி மாமாவை விரும்பறதை சொல்லிடலாம்னு நினைக்கறா.
இதே போல போட்டோ ஒன்றை ஆஸ்பத்திரியில் பாரதியோட ரூமில் வச்சுட்டு வந்துடறா . பார்த்து துடிச்சு போறான் பாரதி. உண்மையில இதுதான் பண்பாடு, பாரம்பரிய பழக்க வழக்கம்னு சொல்றது.
பரிதவிக்கும் பாரதி, அஞ்சலியின் இந்த திட்டத்தையும் முறியடிக்கறான்.சரி, வீட்டில் ஒரு கெட்டுகெதர் வைக்கலாம்னு சவுந்தர்யா முடிவு செய்து, அஞ்சலி குடும்பத்தை கூப்பிடறாங்க.
அப்போ, பாரதியை பார்த்துவிட்ட அஞ்சலி மாடிக்கு ஏறிப்போக, அஞ்சலி.. எதுக்கு அங்கே போறேன்னு வரும் கால மாமியார் சவுந்தரியா கேட்க, பதில் சொல்ல முடியாமல் விக்கித்து நிக்கறா அஞ்சலி.
மீதியை நாளைக்கு பார்ப்போம்...