ஒவ்வொரு நாளும் ஒரு மாதிரி நடந்துக்கறானே சந்தோஷ்... இவனை நம்பியா ஜனனி?
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் சந்தோஷ் இரு தலை கொள்ளி எறும்பா தவிக்கிறான். இவன்கிட்ட மாட்டிகிட்டு ஜனனி முழிக்கறா.
சக்தியை காதலிச்சுட்டு,ஜனனியை கல்யாணம் செய்துக்கறான் சந்தோஷ்.இப்போ விவாகரத்து கேட்டு வக்கீல் வக்கீலாத் தேடி அலையறதும் சந்தோஷதான்.
ஜனனி ஜடம் மாதிரி அந்த வீட்டில் இருக்கா. சந்தோஷ் கையை பிடிச்சாலும் ஓகே...அவனே விலகிப் போனாலும் ஓகே ..ஒரு கோவம் ஆற்றாமை கூட இல்லேன்னா எப்படி?
பணக்கார பொண்ணுங்க இன்னுமா இப்படிப்பட்ட ஆட்டிடியூடுல இருப்பாங்க... உலகம் தெரியாதா?
ஜனனியை கட்டி பிடிச்சு
முதல் நாள் இரவு தன கையை பிடிச்சு,முகத்தை நிமிர்த்தி, இதழில் இதழ் வச்சு முத்தம் கொடுக்க நெருங்கிய சந்தோஷ், போன் வந்ததும் வெளியில போறான். அன்னிக்கு இரவு வெளியில போயிட்டு வந்து ,ஹாலில் தனியா படுத்துக்கறான். இவனுக்கு போர்வை போர்த்திட்டு போறா ஜனனி.
முகம் பார்த்து மறுநாள்
மறுநாள் காலையில் ஜனனனியின் முகம் பார்த்து சந்தோஷால் பேச முடியவில்லை. சீக்கிரமே கிளம்பிடறான். கிச்சனில் ஜனனி நிற்க அவளை பின்னால் வந்து கட்டிக்கறான் சந்தோஷ். கிச்சன்லே என்னங்க இப்படி... யாராவது பார்த்துட்டான்னு ஜனனி கொஞ்சறா. என் பொண்டாட்டி யார் பார்த்தா எனக்கு என்னன்னு சொல்றான் சந்தோஷ்.
மல்லிப்பூவை ஜனனியின் கழுத்தில்
ஜனனியின் தலையில் இருந்த மல்லிப்பூவை எடுத்து அவள் கழுத்தில் போட்டு விடறான்.முத்தம் குடு நான் போயிடறேன்னு சொல்றான். சரின்னு சொல்லி அவன் கையில் இவள் முத்தம் கொடுக்க.. இதென்ன உங்க ஊரில பொண்டாட்டி புருஷன் கையிலதான் முத்தம் குடுப்பாங்களா? வாயில் முத்தம் குடுங்கன்னு சொல்றான்.
கடைசியில் எல்லாம் கனவு
கடைசியில் அங்கு சந்தோஷும் இல்லை... அவன் தன்னை கட்டிக்கிட்டது கனவுன்னு நினைக்கறா. ராத்திரி நல்லாத்தானே இருந்தார்... காலையில் முகத்தை கூட பார்க்காம பேசறாரே.. .கடவுளே அவர் நல்லாருக்கணும்.அவருக்கு எந்த மனக்குறையும் வரக்கூடாதுன்னு வேண்டிக்கறா ஜனனி.
பொண்ணுங்க பொறுமையின் சிகரம்னு சொல்லுவாங்க... ஜனனி அதை விட மேல...