அடடா.. இந்த முறையும் தேவராஜ் ஜெயிச்சுட்டாரா... நாகப்பன் பாவம்!
சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் தேவராஜ்தான் இந்த முறையும் படகுப் போட்டியில் ஜெயிச்சுடறார்.
இத்தோடு மூன்றாவது முறையா தேவராஜ் ஜெயிச்சதுனால, நாகப்பன் ஆதரவு மீனவர்கள் இத்தனை வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தாங்க.
பிடிச்சு வரும் மீன்களை எல்லாம் தேவராஜிடம் அஞ்சுக்கும் பத்துக்கும் கொடுத்துட்டு பற்றாக்குறையில் குடும்பம் நடத்தி கஷ்டப்படறாங்க.
இந்த வருஷம்
இந்த வருஷமாவது நாகப்பன் ஜெயிச்சுட்டா..நம்ம கஷ்டம் எல்லாம் தீர்ந்து போகும் என்று மக்கள் நம்பி இருக்க கடைசியில் நாகப்பன் விரித்த வலையில் மீன்களே சிக்கலை. காரணம் என்னன்னு பார்த்தால்...வலையில் பெரிய ஓட்டை.
நாகப்பன் ஆட்கள்
தேவராஜ் ஆட்கள் மகிழ்ச்சியில் இருக்க...நாகப்பன் ஆட்கள் துக்கத்தில் இருக்காங்க. தேவராஜும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கார்.இனி நாகப்பன் ஆட்கள் பிடிக்கும் மீன்களுக்கு தேவராஜ் நிர்ணயிப்பதுதான் விலை.
தேவராஜ் போலீஸ்
நாகப்பனின் ஓட்டை விழுந்த வலையை ஆராய்ச்சி செய்த போலீஸ், தேவராஜ் வீட்டுக்கு வர்றாங்க... தேவராஜ் எதுக்கு நிக்கறீங்க...உட்காருங்கன்னு சொல்லி செம ஹாயா உட்காருகிறார்.
நீங்க எழுந்துருவீங்க
என்னை உட்கார சொல்றது இருக்கட்டும். நான் சொல்ற விஷயத்தை கேட்டா,இப்போ நீங்க எழுந்திரிச்சு நின்னுருவீங்கன்னு போலீஸ் சொல்றார். நம்ம பசங்க எல்லாம் வெற்றி களிப்புல இருக்காங்க...சொல்ல வந்த விஷயத்தை சட்டு புட்டுன்னு சொல்லுங்கன்னு கூலா சொல்றார் தேவராஜ்.
தேவராஜ் நல்லவரா...நாகப்பன் நல்லவரான்னே இன்னும் நமக்கு தெரியலை...