அம்மாவுக்கு நினைவு நாள்.. பவுர்ணமிக்கு பிறந்த நாள்.. என்ன செய்வா பாவம்...!
சென்னை: சன் டிவியின் பவுர்ணமி சீரியல் தெலுங்கு டப்பிங் சீரியல். சக்ரவர்த்தி பெரிய தொழிலதிபர்.பெயருக்கு ஏத்த மாதிரி அவர் பர்சனாலிட்டியும் சூப்பர்.
சக்ரவர்த்தியோட முதல் மனைவி வாசுகி. இவங்க வயித்துலேர்ந்து பவுர்ணமி பொறக்கும்போதே வாசுகி இறந்துடறாங்க.
சந்தர்ப்ப வசத்தால் சக்ரவர்த்தி வசந்தியை ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிக்கறார். இவங்களுக்கு பிறந்த பொண்ணுதான் பவானி
அப்பா சக்ரவர்த்தி
பவுர்ணமியை அப்பா சக்கரவர்த்திக்கு கொஞ்சமும் பிடிக்காது. சின்ன வயசுலேர்ந்து எல்லாத்துக்கும் பழக்கப்பட்டு,பாட்டி, சித்தி வளர்ப்பில் ரொம்ப நல்ல பொண்ணா வளர்ந்து இருக்கா இவளுக்கு வீட்டுல அப்பா எதிரா இருக்கார். வெளியில கூட படிச்ச பொண்ணு எதிரியா இருக்கா.
அம்மாவுக்காக
அம்மாவான சித்திக்காக, அவங்களை ரவுடிகிட்ட இருந்து காப்பாத்த போறா.ஆனா,அந்த ரவுடி இவளோட அம்மா மேலிருந்த ஆசையை விட்டுட்டு இவளை கட்டிக்க துடிக்கறான்.இந்த ரெண்டு சூழ்ச்சி வலையும் பவுர்ணமிக்கு தெரியாமலே பின்னப்படுது
தப்பு தப்பா
பவுர்ணமி கூட படிச்சப்பொண்ணு பவுர்ணமி நிறைய மார்க் எடுத்து ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்துட்டான்னு பழிவாங்க துடிக்கறா.அவளுக்கு அவளோட அப்பாவும் துணையா இருக்க...யாரோ ஒருவனை பவுர்ணமி காதலிக்கறான்னு சொல்லி அனுப்பிவைக்கறாங்க. அவனும் பவுர்ணமியின் காதலன் மாதிரி நடிக்கறான்.
சக்ரவர்த்தி பார்த்துடறார்
சக்ரவர்த்திக்கிட்ட அந்த பையன் உங்க பொண்ணு எனக்காக காத்திருக்கா,நான் பேசிட்டு வரேன்னு சொல்லிட்டு போயி சும்மா யாரோமாதிரி பேசி டிராமா போடறான். வீட்டில் வந்து சக்ரவர்த்தி கத்தறார்.பவுர்ணமி பாவம் ஒண்ணும் தெரியாம விழிக்கறா.
இறந்த நாள்
பவுர்ணமிக்கு பிறந்தநாள்னு பாட்டி,சித்தி, தங்கச்சி பவானி எல்லாரும் கொண்டாட்டத்தில் இருக்க, சக்ரவர்த்தி மனைவி இறந்த நாள்.. பவுர்ணமி பிறந்ததுதான் அவளை கொன்னுட்டா.. இவளுக்கு இங்கே கொண்டாட்டமான்னு கோவத்தில கத்தறார்.
யாருக்கு ராம்கி
பாவம் பவுர்ணமி... பிறந்ததில் இருந்தே கஷ்டத்தில் இருக்கா..இவளை காதலிக்கற,...இவளும் ஆசைப்படற ராம்கியையும் அப்பா சம்மதத்தோட தங்கச்சி பவானி காதலிக்கறா.. பவுர்ணமிக்கு நல்ல காலம் எப்போது?