அம்மாவை தொந்தரவு செய்யும் பாலியல் ரவுடி... காப்பாற்றும் பெண்.. அசத்தல் தைரியம்!
சென்னை: சன் டிவியின் பவுர்ணமி சீரியலில் அம்மாவை பாலியல் ரீதியாக துரத்தும் ரவுடியின் வீட்டுக்கே போயி அவனை தண்டிக்க போறா பவுர்ணமி.
பவுர்ணமி தெலுங்கு டப்பிங் சீரியல்.தமிழ் சீரியல்களை விட தெலுங்கு சீரியல்களில் கொஞ்சம் துரோகம், வெறுப்பு, துயரம் இதெல்லாம் தூக்கலாவே இருக்கும்.
அப்படித்தான் இந்த சீரியலும் இருக்கு. சின்ன வயசுல தன்னை கல்யாணம் செய்ய வற்புறுத்திய ஒரு ரவுடியிடம் இருந்து, தப்பிச்சுதான் சக்ரவர்த்தியை ரெண்டாம் கல்யாணம் செய்துக்கறாங்க வாசுகி.
வேட்பாளர்கள் தேர்வு.. தேசிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி தென்னிந்திய கட்சிகள் அசத்தல்
ஏற்கனவே கல்யாணம்
ஏற்கனவே கல்யாணமாகிவிட்ட அந்த ரவுடிக்கு வாசுகியை கல்யாணம் செய்துக்க முடியலைன்னு வருத்தத்துல மன நிலை சரியில்லாம போயிருது. வைத்தியம் பார்த்து அவனோட அம்மா அவனை சரி செய்யறாங்க.
அம்மாவும் உடந்தை
இவனுக்கு உடந்தையா இருக்கும் அவனோட அம்மா வாசுகியோட வீட்டை கண்டு பிடிச்சு பையன்கிட்ட சொல்லிடறாங்க. இப்போ ரெண்டு பேரும் வசந்தி வீட்டுக்கே வந்து,பையனோட வாழணும்னு மிரட்டறாங்க.
அம்மாவை காப்பாத்த
இதை கண்டு பிடிச்ச பவுர்ணமி, அம்மாவின் துயரம் தீர்க்க ரவுடியின் குகைக்குள்ளே தைரியமா போயி, ரவுடியின் கன்னத்துல விடறா ஒரு அறை... வீட்டிலிருந்த ரவுடிகள் பவுர்ணமியை சுத்தி வளைக்க...
சூப்பர் மிரட்டல்
என் மேல யார் விரலாவது பட்டுச்சு..அடுத்த நிமிஷம் உங்களை போலீஸ் வந்து அரெஸ்ட் பண்ணிடும். என் கையிலிருக்கறது வெறும் பேக் இல்லை.இதுக்குள்ள கேமிரா லைவ்ல இருக்கு.
நீ வந்திருக்க
ஏதாவது பண்ணினா.. என் ஆளுங்க உடனே சோஷியல் மீடியாவுல அப்போலொட் பண்ணிருவாங்க..ஜாக்கிரதைன்னு சொல்றா.. என்னடி உன் அம்மாவை வர சொன்னா நீ வந்திருக்கே.. போயி உங்க அம்மாவை வர சொல்லுடீன்னு சொல்றான்.
தைரியம் வேணும்
அந்த அம்மா வர மாட்டாங்கன்னு சொல்லத்தாண்டா நான் வந்திருக்கேன்னு சொல்றா பவுர்ணமி. பொண்ணுகளுக்கு இந்த தைரியம் வேணும்..அது அவசியம் இந்த காலத்துக்குன்னு உணர்த்துவதா இருக்கு.