பவுர்ணமி போலீஸ் ஸ்டேஷன்ல.. அப்பா இப்படி இருக்காரே!
சென்னை: சன் டிவியின் பவுர்ணமி சீரியல் நிஜமா பெத்த பெண்ணை சுத்தமா விரும்பாத அப்பாவும் இருப்பாரான்னு கேள்வி கேட்கற மாதிரியான கதையா இருக்கு.
ரொம்ப காதலிச்ச மனைவி,பவுர்ணமி பிறந்த உடனே இறந்து போயிடறா. இதுக்கு ராசி இல்லாத பவுர்ணமிதான் காரணம்னும் ,பவுர்ணமி ஒரு ராசியில்லாத பொண்ணுன்னும் அப்பா சக்ரவர்த்தி அவளை வெறுக்கறார்.
பெத்த பொண்ணு மேல உங்க வீட்டு வெறுப்பு எங்கவீட்டு வெறுப்பு இல்லைங்க உலகமகா வெறுப்பு. ஆனா,ரெண்டாம் தாரத்து மகளான பவானி மேல அப்பாவுக்கு உசிரு.
அப்பா என்ன சொன்னாலும், என் முகத்துல முழிக்காதேன்னு சொன்னாலும், அப்பான்னா பவுர்ணமிக்கு உசிரு. படிப்புல கெட்டிக்காரி, வேலை செய்யறதுல கெட்டிக்காரி.
பவுர்ணமி யுனிவர்சிட்டி முதல் வந்ததுக்கு பொறாமையோடு பொக்கே குடுக்க வர்றா பவுர்ணமின் தோழி. பவுர்ணமிக்கு அடுத்து இவதான் அதிக மார்க்.
கண்மணி மெதுவா போகுதே.. போரடிக்க ஆரம்பிச்சிருச்சே!
பவுர்ணமிக்கு எடுத்துட்டு வந்த பொக்கேவை தூக்கி எரிந்து தோழியை அவமானப்படுத்தி அனுப்பறார் பவுர்ணமியின் அப்பா.பதிலுக்கு உனக்கு பார்த்த டே பார்ட்டின்னு சொல்லி ஒரு இடத்துக்கு வர சொல்லு.அவளை பிரார்த்தல் கேசுல உள்ள தள்ளிருவோம்னு,தோழியின் அப்பா ஐடியா தர்றார்.
அதே போல நடக்க ,இப்போ பவுர்ணமி போலீஸ் நிலையத்தில்..தன் அப்பா தொழிலதிபர் சக்ரவர்த்தி. அவரைப் பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும். .வேணா போன் பண்ணி கேட்டு பாருங்கன்னு சொல்லிட்டு கதறி அழறா.
அப்பாவும் போன் பண்ணினவுடனே வர்றார். தன் சின்னப் பொண்ணை போலீஸ் புடிச்சுக்கிட்டு போயிருச்சுன்னு. என் பொண்ணை எப்படி அரெஸ்ட் பண்ணலாம்னு அவர் கத்த, பவுர்ணமியை வெளியே கொண்டு வர,சிலையா நிக்கறார் அப்பா..
பவுர்ணமி அப்பா அப்பான்னு கதற..இவ என் பொண்ணு இல்லையேன்னு சொல்லிட்டு வந்துடறார். வீட்டுக்கு வந்து சாப்பிட மனசு இல்லை.செத்து போன பொண்டாட்டி போட்டோ முன்னால நின்னு, நான் வேற பொண்ணுன்னு நினைச்சாவது காப்பாத்தி இருக்கணும்.தப்பு பண்ணிட்டேன்னு புலம்பறார்.
பவுர்ணமி ஜெயிலில் இருப்பது ,சித்தி, தங்கச்சி, பாட்டி யாருக்கும் இன்னமும் தெரியாது.