இரட்டைப் பெண் குழந்தைகளும் சேர்ந்து.. சேட்டைக்கு அளவே இல்லை.. புலம்பும் "கல்பனா"!
சென்னை: திரைப்படத் துறையில் நடிப்பவர்களுக்கு இடையில் காதல் ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. அப்படி காதலித்து பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட வெற்றிகரமான தம்பதிகள் தான் சாண்ட்ரா ஆமி மற்றும் பிரஜின் தம்பதிகளும் ஆவார்.
இவர்கள் இருவருமே பிரபலமானவர்கள் தான் . சாண்ட்ரா முன்னாள் மிஸ் திருவனந்தபுரம் எனும் பட்டத்தை பெற்றிருக்கிறார். பிரஜின் அவருடைய சின்னத்தம்பி மூலமாக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். அந்த சீரியலில் அவர் சின்னத்தம்பி எனும் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் .அந்த சீரியலுக்காக அவருக்கு விருதுகள் கிடைத்திருக்கிறது.
இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் இவர்களின் காதல் சுவாரசியமானது இவர்களுக்கு காதலின் அடையாளமாக கடந்த 2019ஆம் ஆண்டு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது அதற்குப் பிறகு சாண்ட்ரா ரொம்ப பிசியா மாறிவிட்டார்.
செல்ல மகள் பிறந்த நாளை எளிமையாக கொண்டாடிய ஜோடிகள்!
சமாளிப்பது கஷ்டம்
இரண்டு குழந்தைகளையும் சமாளிப்பது அவ்வளவு எளிதான காரியமாக இல்லையாம் இரண்டுமே க்யூட்டா அழகா இருக்கிறது. சேட்டைகளையும் படுசுட்டி தானாம் அவர் ஒருவரால் இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள முடியாது அந்த அளவுக்கு வாண்டு தனம் பண்ணுதுங்க. குழந்தை பிறப்பதற்கு முன்னமே பிரஜின் தங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் தான் வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
நிறைவேறிய ஆசை
ஆசைப்பட்டது போலவே ஒரே டைம்ல இரண்டு பெண் குழந்தைகள் கிடைத்தது அதிர்ஷ்டம் அப்படின்னு தான் சொல்லணும். ஆனால் இன்னும் எந்த புகைப்படங்களையும் தன்னுடைய குழந்தைகளின் முகத்தை காட்டாமல் வைத்திருக்கின்றனர். இந்த தம்பதியினர் குழந்தை பிறந்த கொஞ்ச நாட்கள்ல அந்தக் குழந்தைகளின் கால்களில் ருத்ரா மித்ரா அப்படின்னு ரெண்டு ரிங்கு மட்டும் போட்டு போட்டோ அப்லோடு பண்ணி இருந்தாங்க. அது வைரலாக பரவிக் கொண்டிருந்தது.
கடவுளின் கிப்ட்
அவர்கள் எவ்வளவு சேட்டை பண்ணினாலும் இரண்டு குழந்தைகளும் கடவுள் அவர்களுக்கு கொடுத்த கிப்ட் தானாம். சமீபத்தில் அந்த இரண்டு குழந்தைகளுக்கும் ஃபஸ்ட் பர்த்டே கொண்டாடி இருக்கிறார்கள். இப்ப இருக்கிற சூழ்நிலையில் வெகு விமர்சனமாக கொண்டாட முடியாததால் எளிமையாக வீட்டில் கொண்டாடி அந்த போட்டோக்களை இருவரும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்கள். அது வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.
சுத்திப் போடுங்க
குழந்தைகளை பார்த்து ரசிகர்கள் தேவதையே மிஞ்சும் போல குழந்தைகள் சுத்தி போடுங்க அப்படி கமெண்ட் பண்ணி இருக்காங்க மேலும் எங்களுடைய ஆசிர்வாதங்கள் குழந்தைகளுக்கு எப்போதும் உண்டு என்றும் ஆசீர்வதித்து இருக்காங்க. அதற்கு பிரஜின் தன்னோட இன்ஸ்டாவில் இப்ப இருக்கிற கஷ்டமான சூழ்நிலையில் எல்லோரும் எங்கள் குழந்தையை ஆசீர்வதித்து கமெண்ட் பண்ணி இருக்கிறது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது உங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்கள் குழந்தைகளை நன்றாக வாழ வைக்கும் என்று உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.