பிரிதிவிராஜ் நன்றாக சவால் விடுகிறார்...!
சென்னை: ஜெயா டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி சவால். இதைத் தொகுத்து வழங்கி வந்தவர் பப்லு என்று செல்லமாக அழைக்கப்படும் பிரிதிவிராஜ். இவர் தொகுத்து வழங்கி வந்த சவால் நிகழ்ச்சி, லாக்டவுன் ஆரம்பித்த காலத்தில் இருந்து மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
பிரிதிவிராஜ் அலட்டல் இல்லாமல் இந்த நிகழ்ச்சியை மிக அருமையாகத் தொகுத்து வழங்கி வருகிறார். போட்டியாளர்களை ஊக்குவிப்பது... அந்த இடத்தில் எதாவது காமெடி நடந்தால் சிரிப்பது என்று ஆங்கருக்கே உரித்தான அத்தனைத் தன்மைகளுடனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி இருக்கார்.
தொடங்கிய நுங்கு அறுவடை.. உள்ளூர்களில் களைகட்டும் விற்பனை.. ஆர்வம் காட்டும் மக்கள்!
சவால், ஜெயா டிவி ஆரம்பித்த ஒரு சில மாதங்களில் இருந்தே, ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பித்த காலம் தொட்டே பிரிதிவிராஜ்தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
விளையாட்டுகள் பலவிதம்
கல்லூரி பிள்ளைகள், சாலைகளில் செல்வோர், அலுவலகம், ஸ்டுடியோ என்று எல்லா இடத்திலும் இந்த சவால் நடக்கும். சும்மா சின்ன சின்ன விளையாட்டுப் போட்டிகள்தான். செங்கல்லை கையில் எடுத்து எடுத்து அதில் கால் வைத்து நடப்பது, பந்தை தன்னை சுற்றி தூக்கிப்போட்டு பிடிப்பது என்று எளிதான சுவாரஸ்யமான விளையாட்டுக்கள்.
இப்போதும் பார்க்க
சவால் நிகழ்ச்சியில் பொது மக்கள் கலந்துக் கொள்வதாலும், மாணவர் மாணவிகளை போட்டியில் பார்ப்பதாலும், நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது. இது போன்ற நிகழ்ச்சிகள் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டாலும், மக்கள் போரடிக்காமல் பார்க்கிறார்கள். இதில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பங்கும் நிறையவே உள்ளது.
தொகுப்பாளர் கலாய்
இப்போதெல்லாம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் என்று வந்தால், அவருக்கு கலாய்க்கத் தெரிந்து இருக்க வேண்டும் என்கிற ஒரு குவாலிஃபிகேஷனும் இருக்கிறது. இதை அமல் படுத்திய பெருமை விஜய் டிவிக்கே சாரும். விஜய் டிவியைப் பார்த்து சன் டிவியும் கற்றுக்கொண்டது. விஜய் டிவி போலவே சன் டிவியின் அத்தனை நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் இந்த கலாய்க்கும் பணியை மிகக் கேவலமாக செய்து வருகிறார்கள்.
பெப்சி உமா
பெப்சி உமா போன்ற தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளை இன்றும் பார்க்கலாம். ஆனால், அது மாதிரி நிகழ்ச்சிகளை எல்லாம் ஓரம் கட்டி பெட்டிக்குள் போட்டு பூட்டிவைத்து இருக்கும் சன் டிவி ஏற்கனவே ஒளிபரப்பிய சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. இது மக்களின் பொறுமையோ பொறுமையை சோதிப்பது போல் இருக்கிறது.