என்னதான் வயசானாலும் பொண்டாட்டின்னா டங்கு ஸ்லிப்பாகுது பாருங்க...!
சென்னை: சன் டிவியின் பிரியமானவள் சீரியலை இரவு நேரத்துக்கு மாத்தினாலும், அதை பகலிலும் ஒளிபரப்பு செய்யறாங்க. பகலில் ரொம்பவே காலம் கடந்துதான் இப்போது தினமும் ஒளிபரப்பறாங்க.
புதுசா பார்க்கறவங்க சீரியலை பார்க்க ஆரம்பிச்சு, இப்போது இரவில் ஒளிபரப்பாகும் சீரியலையும் பார்க்கும்படி வியூவர்ஸை இழுக்கணும்னு விகடன் டெலிவிஸ்ட்டாஸ் போட்ட கணக்கும், சன் டிவி போட்ட கணக்கும் தப்பாகலை.
அவங்க போட்ட கணக்குப்படித்தான் வியூவர்ஸ் கணிசமா அதிகரிச்சு இருக்காங்களாம். இப்போ பல நாட்களா உமாவும். அவங்க ரெண்டாவது மருமகள் பூமிகாவும் பொய் கொலை கேசில் சிக்கி ஜெயிலில் இருக்காங்க.
பவுர்ணமிக்கா ராமன்... கஷ்டத்துக்கு விடிவு காலம் எப்போ.. இவ்ளோ கஷ்டப்படறாளே... ஐயோ பாவம்!
காதலிச்சு கல்யாணம் செய்துக்கிட்டவங்க உமாவும், கிருஷ்ணனும். என்னதான் இருந்தாலும் அந்த அந்யோன்யம் இருக்குமில்லையா, இங்கே புருஷனுக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சு, அங்கே மனைவிக்கு தன் புருஷனுக்கு என்னமோ நடக்குதுன்னு படபடப்பு வந்துச்சு.. அந்த அளவுக்கு பரஸ்பரம் மனசை புரிஞ்சுக்கிட்டவங்க ரெண்டு பேரும்.
கிருஷ்ணன் சரியாகி வீட்டுக்கும் வந்தாச்சு... லேப்டாப்புல கிருஷ்ணன், உமாவின் கடைசி மகன் ஏதோ லெட்டர் டைப் அடிச்சு அப்பாவிடம் காமிக்கறான். என்னடா இப்படி அடிச்சுருக்க... உமா..புள்ளி எதுவுமே காணோம்னு சொல்ல
அண்ணன், தம்பி, மாமாவின் மனைவி மூவரும் சிரிக்கிறாங்க. மறுபடியும் என்னப்பா சொன்னீங்கன்னு கேட்க.. அதாண்டா உமா..புள்ளி எதுவுமே காணோமேன்னு சொல்றார் கிருஷ்ணன்.
எப்போ பார்த்தாலும் அம்மா ஞாபகமா இருக்கறதுனால கமாவை உமான்னு மாத்திட்டீங்களான்னு கேட்கறாங்க ரெண்டு புள்ளைங்களும். அப்போதான் கிருஷ்ணன் வெட்கப்படுகிறார்.
சும்மா சொல்ல கூடாது கிருஷ்ணனின் மனைவி இந்த வயசுலயும்.. சும்மா "கும்" அழகு.. சோ.. கிருஷ்ணனின் தடுமாற்றத்தில் தப்பு ஒண்ணும் இல்லையே...