ஃபுல்லா ப்ளூ.. பளிச்சுன்னு தூக்கல் அழகுடன்.. பிரியங்கா நல்கரி!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பி ரேட்டிங் முதலிடத்தில் இருக்கும் ரோஜா சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்துக்கொண்டிருக்கும் பிரியங்க நல்கரி நடத்தியிருக்கும் போட்டோ ஷூட் இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரோஜா சீரியல் மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டு தனக்கென ஒரு இடத்தை வைத்திருக்கும் பிரியங்க நல்கரி பல ரசிகர்களும் ரோஜா என்றுதான் செல்லமாக கூப்பிட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு . சீரியல் மூலமாக இவர் கேரக்டராவே மாறி விட்டார்.
இவருக்கு முதல் சீரியலில் இந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் கிடைக்கும் என்று அவர் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். அந்த அளவிற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியிருக்கிறது.
ஆஹா.. 100 நாளைக்கும் ரெடி பண்ணிட்டாரே.. ஷிவானின்னா ஷிவானிதாய்யா.. "கீப் வாட்சிங்"!
மாடலிங்கிலிருந்து சினிமா
சீரியல் மட்டுமல்லாமல் இணையதளங்களிலும் பிஸியாக இருக்கும் இவருக்கு இளைஞர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு இருக்கிறது. இவரது குடும்ப சூழ்நிலை காரணமாக தன்னுடைய மேல் படிப்பை முடித்து விட்டு தனது சகோதரிகளை படிக்க வைத்தது இவர் தானாம். அந்த நேரத்திலிருந்து பிஸியாகவே வேலை செய்து கொண்டு இருந்திருக்கிறார். அதன்பிறகு மாடலிங்கில் காலடி எடுத்து வைத்ததும் அதன் மூலமாக இவருக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தீயாய் வேலை செய்யும் பிரியங்கா
அதன் மூலமாக சில தெலுங்கு சீரியல்களில் அறிமுகமாகியிருக்கிறார். அதன் பிறகு சில ரியாலிட்டி ஷோக்களிலும் தொகுப்பாளராகவும் தெலுங்கில் பணியாற்றிக் கொண்டிருந்தார். தெலுங்கில் இவரைப் பார்த்த பிறகுதான் சுந்தர் சி இயக்கத்தில் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது . சின்ன ரோலாக இருந்தாலும் பரவால்லை தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் இவரும் உடனே சம்மதம் என்று சொல்லி இதில் நடித்திருக்கிறார் .
ஏற்றம் கொடுத்த ரோஜா
இந்த படத்தில் நடித்த இவருக்கு ரோஜா சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது . ஆனால் படத்தில் நடித்ததை விடவும் இந்த சீரியல் மூலமாக பெரும் ரசிகர்களை இவர் பெற்றிருக்கிறார். சீரியல்களில் இவர் எப்போதும் பக்தி பழமாக நடித்திருப்பார் . ரோஜா மனமுருகி வேண்டினால் கடவுளே நேரில் வந்து விடும் என்றுதான் ரசிகர்கள் கூட எண்ணியிருப்பார்கள். அந்த அளவிற்கு இவர் நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருப்பார் நிஜத்திலும் பிரியங்கா இப்படி தானாம். எப்பவுமே கோவில் பூஜை என்று மங்களகரமாக இருப்பாராம்.
சேலையே பிடிக்காதாம்
சீரியலில் எப்போதும் சேலை கட்டிக் கொண்டு தான் இருப்பார். ஆனால் வீட்டில் சேலையைக் கழற்றி தூக்கிப் போட்டு விடுவாராம்.. அதாவது மாடர்ன் டிரஸ்தான் பெரும்பாலும். எப்பவுமே கவுன் போடுவது தான் ரொம்ப பிடித்தமானதாம். அதனால் வீட்டில் ஃப்ரீயாக கவுன் தான் போட்டுக்கொண்டு இருப்பாராம். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி இணையத்தளங்களை கதிகலங்க வைத்து வருகிறார் .
நீல ராணி
அந்த வகையில் தற்போது ப்ளூ கலர் சேலையில் விதவிதமான போட்டோக்களை எடுத்து குவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவருடைய யூடியூப் சேனல்லயும் ஒரு வீடியோவை அப்லோட் பண்ணி இருக்கிறார். அதுவும் வைரலாக பரவி வருகிறது. ப்ளூ கலர் சேலையில் பூவேஉனக்காக சீரியலுக்கான இவரது கெஸ்ட் ரோலில் நடித்து இருப்பார் .அந்த சீன் மற்றும் படப்பிடிப்பை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். இதுவும் வைரலாக பரவி வருகிறது.
வழியும் ரசிகர்கள்
போட்டோ ஷூட்டில் இவரைப் பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் ஏகத்துக்கும் இவரை வர்ணித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சில நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள். உருகி உருகி கமெண்டுகளை போடும் அவருடைய ரசிகர்கள் இவருடைய தமிழ் உச்சரிப்பையும் பேச்சையும் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கிறார்களாம். சில தமிழ் நடிகைகள் கூட ஆங்கிலத்தில் பேசி அனைவரையும் கொன்று கொண்டிருக்கிறார்கள்.
ஹோம்லி ரோஜா
பிரியங்கா, நீங்கள் இந்த அளவிற்கு தமிழில் பேசுகிறார்கள் என்று இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எவ்வளவுதான் அழகாக உடை அணிந்தாலும் அதிலும் நாங்கள் கலாய்ப்போம் என்று சில நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டு வருவார்கள். அந்த மாதிரிதான் இவர் சேலையில் அழகாக ஹோம்லியாக உடை உடுத்தி இருந்தாலும் இவரையும் இதுதான் ப்ளூ ஃபிலிம் எல்லாமே ப்ளூ கலர் ஆக இருக்கிறது என்று இவரை கிண்டல் அடித்து வருகிறார்கள்.