காம் பசங்க ரொம்ப போர்...! பசங்க மாஸா கெத்தா இருக்கணும்!
சென்னை: ரங்கோலா ஹோலா ஹோலா பெண்ணே நீ தானோ என்று பாடும்படி இவரின் பெயர் இருக்கிறது. ஆம்..ரக்ஷா ஹோலா... விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனுக்கு ஜோடியாக நடிக்கும் தேவி இவர்தான்.
கொழுக் மொழுக் என்று இருந்தாலும், நல்ல உயரம் என்று இருப்பதால், கட்டுடலுடன் அழகான தோற்றத்தில் இருக்கார் ரக்ஷா.பிறந்தது வளர்ந்தது எல்லாம் பெங்களூர்தான் தமிழ் சரளமாக பேச வரவில்லை என்றாலும் நன்றாகப் பேசுகிறார்.
திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகப்போகிறது. பெங்களூரு சென்னை என்று பறந்துக்கொண்டு இருக்கார். இப்போதைக்கு நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மட்டும்தான் நடித்துக்கொண்டு இருக்கார். மாடலிங், கன்னட சினிமா என்று தடம் பதித்துவிட்டு இப்போது விஜய் டிவியின் ஜோதியில் ஐக்கியமாகி இருக்கார்.
ஸ்ட்ராபெரி லிப்ஸ்
ரக்ஷனாவின் கருவண்டு கண்கள், ஸ்ட்ராபெரி லிப்ஸ் இரண்டுமே மாயனின் ரொமான்ஸ் காட்சிக்கு கூடுதல் பிளஸ் சேர்ப்பதாகத்தான் இருக்கிறது. மாயனும், தேவியும் சேர்ந்து இருக்கும் காட்சிகளே ரொம்ப நல்லாத்தான் இருக்கும் என்று ரக்ஷாவே ரசிச்சு சொல்கிறார். ஆரம்பத்தில் அரவிந்த் கேரக்டர்தான் இவுங்களுக்கு ஜோடியா இருந்தது.. இப்போ மாயனை சேர்த்து இருக்கிறார்கள் என்று கேட்டால், சிரிக்கிறார்.
அரவிந்த் வேஸ்ட்
மாயன்தான் பெஸ்ட்.. அரவிந்த் வேஸ்ட்னு சொல்றார். காம் பசங்க ரொம்ப போர்.. சாம்பார் என்று அடுக்கடுக்காய் வெறுப்பை சொல்லி, பசங்க மாயன் மாதிரி கெத்தா.. மாஸா இருந்தால்தான் நல்லா இருக்கும் என்றும் சொல்கிறார். எப்படி விஜய் டிவிக்கு வந்தீங்க என்று கேட்டால், தமிழ் கடவுள் முருகன் சீரியல் மூலமா வந்தேன். அது முடிஞ்சு நான் போயிட்டேன். அப்புறமா நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் குழு என்னை அப்ரோச் பண்ணினாங்க. அப்படியே வந்து செட்டில் ஆயிட்டேன்னு சொல்றார்.
நிறைய மாடலிங் ஷோ
கிட்டத்த்தட்ட 50க்கும் மேற்பட்ட மாடலிங் ஷோ செய்து இருக்காராம் ராக்ஷச. அத்தோடு பிராண்ட் அம்பாசிடர் என்று மாடலிங் தொடர்புடைய வேலைகளிலும் இருந்த அனுபவம் இருக்கிறது ரக்ஷனாவுக்கு. ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் ஆங்கரிங் செய்ய ரொம்ப ஆசைப்பட்டு, அது முடியாமல் போனது என்று வருத்தம் தெரிவிக்கிறார்,
நாம் இருவர் நமக்கு இருவர்
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது. உடன் நடிக்கும் செந்தில் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டபோது... அனுபவம் நல்லா இருக்கு. செந்தில் சூப்பர் ஸ்டார்,. அவர் கூட தேவி வந்து நின்னாலே மாஸா இருக்கும். டேய் டேய்னு மாயனை தேவி கூப்பிடறது.. மாயனை தேவி அடிக்கறது எல்லாமே ரொம்ப இன்டரஸ்டிங்கா இருக்கும்.
செந்தில் நல்ல டைப்
செந்தில் நல்ல டைப்.. எப்படி சீன் வச்சாலும் எதுவும் சொல்ல மாட்டார். நடிப்புதானே.. அடிச்சால் என்னன்னு கேட்டு, சீனுக்கு நல்லா ஒத்துழைப்பார். எங்க ஜோடி ரசிகர்களுக்கு பிடிச்ச ஜோடியா இருக்கு. இன்னும் இதை நல்லா கொண்டு போகணும்னு டைரக்டர் நினைச்சு இருக்கார். எனக்கு இது ரொம்ப நல்ல அனுபவமா இருக்கு. தேவியா ரொம்ப ரசிச்சு நடிக்கிறேன் என்று சொல்கிறார் ரக்ஷா.