ராப்பகலா உழைச்ச சந்திரகுமாரி...இப்படி ஆகிப் போச்சே.. கவலையில் ராதிமா ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: சன் டிவியில் இப்போது ஒளிபரப்பாகிவரும் சந்திரகுமாரி சீரியல் பிளான் பண்ணும்போது, ராதிகா கடுமையா உழைச்சாராம். காரணம் பிரமாண்ட சீரியல் எடுக்கணும்ன்ற எண்ணத்துலதான்னு சொல்றாங்க.
ஆனா, உழைப்பு , பணம் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல போச்சு.. யோசிக்காம செய்ததுன்னு சொல்றாங்க. இதனாலேயே அவங்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டமாச்சுன்றதும் சொல் கேள்வி.
முதலில் கதை கேட்டதே வெள்ளித்திரையின் பெரிய பெரிய இயக்குநர்கள் கிட்டத்தான்னும், பல நாட்கள் இப்படி பல இயக்குநர்கள்கிட்ட கதை டிஸ்கஷன்னு காலம் கடந்தும் அவங்களுக்கும், இவங்களுக்கும் ஒத்து வரலையாம்.
குடுகுடுப்பை காரன் குறியை மாத்தி சொல்லிட்டானே.. ரவிக்கையை மாத்திப் போட்ட கண்மணி!
சந்திரகுமாரி
ஒரு வழியா சந்திர குமாரி சீரியலை முடிவு செய்து எடுக்கவும் ஆரம்பிச்சாச்சு.. ஆனா, அவங்களால பிரமாண்டத்தை காட்சியில் கொண்டு வர முடியாதபடி, செலவு எகிறியதில், சாதாரண எளிமையான கதையாக மாற்றியதில்தான் சந்திரகுமாரி சறுக்கியதுன்னு சொல்றாங்க.
ராதிகா
இயக்குநர் ராஜமவுலி முதலில் ராஜமாதாவாக நடிக்க ராதிகாவையும் கட்டப்பாவாக நடிக்க சரத்குமாரையும் கேட்டாராம். ஆனால், அவர் கதை சொல்ல வரும்போதெல்லாம் எங்காவது வெளியில போயிருவாங்களாம் ரெண்டு பேருமே.
கடைசியில் ரம்யா
அடுத்து ஸ்ரீதேவியை அணுகி இருக்காங்க...அவங்க சம்பளம் ரொம்ம்ப கேட்க அதிர்ந்த ராஜமவுலி அடுத்து ரம்யா கிருஷ்ணனை கேட்டு இருக்காங்க.. அப்புறமென்ன ரம்யா கிருஷ்ணன் ராஜமாதா, சத்யராஜ் கட்டப்பா.. படமும் சக்கைப் போடு
ட்ரீம்
ராஜமாதா மாதிரி ஒரு ரோலில் நடிக்க வேண்டும் என்பதே இப்போது ராதிகாவின் கனவு. அதனாலதான் சந்திரகுமாரின்னு எடுத்த சீரியல் சொதப்பிருச்சு... ஆனால், கனவை நிறைவேற்றாமல் விடுவதில்லை என்பதில் மிகத் தெளிவாக இருக்காராம் ராதிகா.
10 இயக்குநர்கள்
சந்திரகுமாரி சீரியலில் முதலில் சுரேஷ் கிருஷ்ணாவில் ஆரம்பித்து 10 இயக்குநர்களை இதுவரை மாற்றி உள்ளாராம் ராதிகா. சந்திரகுமாரி பார்ப்பவங்களுக்கு இது தெரியும்.
ராதிகா பல பேருக்கு இன்ஸ்பிரேஷன், ரோல்மாடல்.. அவங்க கனவு நினைவாகற மாதிரி மீண்டும் நல்ல சீரியலில் அவங்க முத்திரை பதிக்க வாழ்த்தலாம்.