அவ்ளோ மோசமாவா இருந்தேன் நான்? அப்பாவியாக ராதிகா சரத்குமார்
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பாக்கியராஜிடம், அவ்வளவு மோசமாகவா நான் இருந்தேன் என்று ராதிகா சரத்குமார் அப்பாவியாக கேட்கிறார்.
கோடீஸ்வரி நிகழ்ச்சியின் பொங்கல் சிறப்பாக திங்கள் முதல் வெள்ளி வரை பிரபலங்கள் கலந்துக்கொண்டு சிறப்பிக்கின்றனர்.
இன்று இரவு பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் பாக்கியராஜ் கலந்துக்கொள்கின்றனர்.
இன்றைய ப்ரோமோ
இன்று இரவு ஒளிபரப்பாகும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மனைவியுடன் கலந்துக்கொள்ளகிறார் இயக்குநர் பாக்கியராஜ். அதற்கான ப்ரோமோவில் ராதிகா அழகாக இருக்கிறார். சினிமாவில் என்னுடன் அதிகமா சண்டை போட்டவர், எனக்கு நிறைய அவார்ட்ஸ் வாங்கிக் கொடுத்தவர் இவர்தான் என்று பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் பாக்யராஜை அறிமுகம் செய்கிறார் ராதிகா.
Thenmozhi BA Serial: அடப்பாவி மதர் இன் லா...அல்வாவை மிதிக்கிறீங்க..பூவை வீசறீங்க!
சினிமா தொடர்பானது
சினிமா தொடர்பானது என்றால் பரவாயில்லை. இது அறிவு சார்ந்த நிகழ்ச்சி, புத்திசாலித்தனம் வேணும் என்று சொல்கிறார் பாக்கியராஜ். ஆனால், நிகழ்ச்சியில் பல துறை தொடர்பான கேள்விகளும் கேட்கப்படுவதும், பதில் அளிக்க நிபுணர்கள் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
சாவித்திரி பத்மினி
ஹீரோயின் கூட்டிகிட்டு வராங்கன்னு சொன்னவுடனே சாவித்திரி பத்மினி ரேஞ்சுக்கு கற்பனை பண்ணி வச்சி இருந்தேன்னு சொன்னார் பாக்கியராஜ். எப்போதும் கிழேக்கே போகும் ரயில் படத்துக்கு ஹீரோயின் அழைச்சுட்டு வந்ததை சொல்வது போல இங்கேயும் அந்த நினைவுகளை பேசினார்கள்.
அவ்ளோ மோசமாவா?
அதற்கு ராதிகா, ஏன் நான் அவ்ளோ மோசமாவா இருந்தேன் என்று அப்பாவியாக கேட்டார். அதை இப்போ எப்படி சொல்றது என்று அதிரடியாக சொன்னார் பாக்கியராஜ். உடனே மூவரும் சிரித்தார்கள். இன்னும் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் முழுவதுமாக பார்த்து ரசிக்க இரவு 8 மணிக்கு கலர்ஸ் தமிழ் டிவி பாருங்கள். அதற்கு ராதிகா, ஏன் நான் அவ்ளோ மோசமாவா இருந்தேன் என்று அப்பாவியாக கேட்டார். அதை இப்போ எப்படி சொல்றது என்று அதிரடியாக சொன்னார் பாக்கியராஜ். உடனே மூவரும் சிரித்தார்கள். இன்னும் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் முழுவதுமாக பார்த்து ரசிக்க இரவு 8 மணிக்கு கலர்ஸ் தமிழ் டிவி பாருங்கள்.