வந்தா 9:30 மணி நேர ஸ்லாட்லதான் வருவேன்.. ராதிகாவின் அதிரடி முடிவு..!
Recommended Video
சென்னை: சன் டிவியில் நடிகை ராதிகா நிறுவன தயாரிப்பான சந்திரகுமாரி சீரியல் நேரம் மாத்தினாலும் மாத்தினாங்க. நேம் கார்டில் கூட ராதிகா படம் இல்லைங்க. பானு போட்டோ மட்டும்தான் போடறாங்க.
மாலை 6:30 ஸ்லாட் என்பது ராதிகாவுக்குள் பல்வேறு மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்திவிட்டது போலும்... அதனால், சட்டு புட்டுன்னு இந்த சீரியலை முடிச்சுக்கிட்டு, புதுக்களத்தில் புது சீரியலில் என்ட்ரி குடுக்கப் போறாங்கன்னு சொல்றாங்க.
அதனாலதான் ரெண்டு மாசம் கேப்... இதுக்குள்ள புதுக்கதை கேட்டு, நல்ல ரோல் அமைச்சு தர சொல்லி அதுல என்ட்ரி குடுக்கலாம்ணும் பேசிக்கறாங்க.
முடியல மச்சான்... எப்பவும் அவ நினைப்பாவே இருக்கு..!
9:30 மணிதான்
அது மட்டுமில்லைங்க வந்தால் 9:30 மணி ஸ்லாட்லதான் வருவேன்னும் சொல்லி இருக்காங்களாம். அதாவது நல்ல கதையில், ராதிகா நல்ல ரோலில் நடித்து, அது ஓகே ஆயிருச்சுன்னா சன் டிவி மீண்டும் 9:30 மணிக்கான ஸ்லாட்டைத் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது என்றும் சொல்கிறார்கள்.
ரேட்டிங்
சந்திரகுமாரி சீரியல் நேரம் மாறியது ஒன்லி ரேட்டிங் பிரச்சனை மட்டும்தானாம். அந்த நேரத்தில் விஜய் டிவி, ஜீ தமிழ் டிவி ரெண்டும் சன் டிவி ரேட்டிங்கை முந்த பார்த்தத்தில்தான் சன் டிவி தரப்பு அப்செட் ஆயிருச்சாம்.
வழி இல்லை
வேற வழியில்லாமத்தான் சந்திரகுமாரி சீரியலின் நேரத்தை மாற்றிக் கொடுத்ததாம் சன் டிவி. இதில் வாக்குவாதத்துக்கு ஒன்றும் இல்லாததால், பேசாமல் ஒதுங்கி கொண்ட ராதிகா. இப்போது புதுக் கதையில் கவனம் செலுத்தி களம் இறங்க சுறுசுறுப்பாக வேலை பார்த்து வருகிறார்னு சொல்றாங்க.
ராணி
வாணி ராணி சீரியல் ஆடம்பரமான சீரியல்தான், அதில் சிக்கனம் செய்து, ஒரே லொக்கேஷனில் சூட் செய்திருந்ததே சன் டிவி நிர்வாகத்துக்கு பிடிக்கலையாம். அதனால்தான் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்கு ஷூட்டிங் போயிட்டு வந்தாங்க.