கட்டிக்கறாங்க.. ஒட்டிக்கறாங்க.. அட முத்தம் கூட.. ம்ம்ம்!
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் ஜோடிகள் சிங்கப்பூர் போயிருக்காங்க .சிங்கப்பூர் ட்ரிப்பை ஜாலியா என்ஜாய் பண்றப்போ ஒரு போட்டி வச்சுக்கறாங்க.
அவங்கவங்க மனைவிகளை இம்ப்ரஸ் பண்ணனும்னு போட்டி வச்சுக்கறாங்க. கடைசியில பேசாம என்ஜாய் பண்ணாம எதுக்குடா இந்த போட்டியை வச்சோம்னு ரெண்டு அண்ணனும் ஃபீல் பண்றாங்க
கார்த்திக் மட்டும் உறுதியா இருக்கான். அதுக்கு அவன் ஒரு காரணமும் சொல்றான். செம்பாவை இம்ப்ரஸ் பண்ண முடியலைன்னு வருத்தமா சொல்றான்.
சந்திரலேகா.. நிலா சீரியல் சங்கமம்... ஸ்வேதா சஞ்சய் வலையில்!
ஒரு வேலைக்காரியா
செம்பா நம்ம வீட்டுக்கு ஒரு வேலைக்காரியா வந்தா. அவளை நான் ஒரு நாள் கூட சந்தோஷமா வச்சுக்கிட்டதில்லை. இன்னும் என்னை சின்னய்யா சின்னயான்னுதான் கூப்பிடறா. இன்னும் நம்ம குடும்பத்துல அவ ஒட்டலையோன்னு தோணுது. அதுக்குத்தான் இந்த போட்டின்னு சொல்றான்.
காணோம்
நிஜமா என்னை இம்ப்ரஸ் பண்ணலை சின்னய்யா.. நான் என்ன சொல்றதுன்னு சொல்றா செம்பா. திடீர்னு செம்பாவை காணோம். கார்த்திக் தேடி ஓடறான்.. வருத்தப்படறான்..அழறான்.
நிக்கறா
கடைசியில் ஒரு இடத்தில் அவளை கண்டு பிடிச்சுடறான். அவளைப் பார்த்துட்டு பேசாம வந்துவிட, பின்னாலேயே செம்பா சின்னய்யா சின்னய்யான்னு கூப்பிட்டுக்கிட்டு வர்றா.
பேசசு
கார்த்திக் சீரியஸா பேசறான்...இந்த போட்டி எல்லாம் வேணாம் செம்பா.. நான் உன்னை காணோம்னு எவ்ளோ துடிச்சு போயிட்டேன்.நீ இல்லாம என்னால இருக்க முடியாது செம்பா.. நான் உயிரா நேசிக்கறேன் செம்பான்னு அழறான்.
எவ்ளோ படிச்சவங்க
நான் பார்த்தேன் சின்னய்யா...உடனே உங்க கண்ணு முன்னால நிக்கணும்னுதான் நினைச்சேன். ஆனா, நீங்க என்மேல வச்சு இருக்கும் பாசத்தை பார்க்க ஆசையா இருந்துச்சுன்னு சொல்றா. நீங்க எவ்ளோ படிச்சவங்க...என்னை இவ்ளோ லவ் பண்றீங்கன்னு தோணுச்சு சின்னய்யான்னு சொல்றா.
ஐலவ் யூ
நீங்க என்னை தேடி அலைஞ்சது, எனக்கே என் மேல பொறாமை வந்துருச்சு சின்னய்யான்னு சொல்லி கன்னத்துல அடிக்கறா. என்னடி அடிக்கறேன்னு கேட்கறான். ஏன் நான் அடிக்கக்கூடாதா.. ஐ லவ் யூன்னு சொல்றா
ஐலவ் யூ
நீ சொன்னது எனக்கு கேட்கலை.. அதுவும் என் செம்பாவா சொல்லுன்னு சொல்றான்.ஐ லவ் யூ சின்னையான்னு சொல்றா.எனக்கு கேட்கலை வேகமா சொல்லுன்னு சொல்றான்.ஐ லவ் யூ சின்னய்யான்னு கத்தறா.
இவனும் பதிலுக்கு கத்தி சொல்ல..இருவரும் கட்டிக்கறாங்க.. ஒட்டிக்கறாங்க..அட முத்தம் குடுத்துக்கறாங்க.. சிங்கப்பூர் போன காரியம் முடிஞ்சுருச்சு...