ஹனிமூனுக்கு ஈசிஆர் காட்டேஜ் புஸ்ஸா... யார் பார்த்த வேலைடா இது?
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் வினோதினிக்கும், ஹரீஷுக்கும் கல்யாணம் முடிச்சுட்டாங்க. இப்போதுதான் வீட்டில் மறுபடியும் சந்தோஷம் களைக்கட்டி இருக்கு.
மறுபடியும் செம்பாவை வீட்டில் எல்லாரும் கொண்டாடுவது ரெண்டு அண்ணிங்களுக்கும் பிடிக்கலை. வேணும்னா தலையில தூக்கி வச்சு கொண்டாட வேண்டியது..இல்லென்னா போட்டு உடைக்க வேண்டியதுன்னு ரெண்டு பேரும் புலம்பறாங்க.
எல்லாரும் டைனிங் டேபிளில் சாப்பிட்டுட்டு இருக்காங்க. செம்பான்னு நினைச்சு வினோதினி கையைப் பிடிக்க,அது வடிவு அண்ணியின் கை.என்ன வினோ யாருன்னு நினைச்சு கையைப் பிடிக்கறேன்னு கேட்கறா.
கடைசியில நிலா வளர்ப்பு பொண்ணா...வெறுப்பு அதனாலதானா?
இல்ல அண்ணி செம்பா அண்ணின்னு நினைச்சுகிட்டேன்னு சொல்லி சொல்றா.ஹரீஷ் என்னன்னு கேட்க, நீதானேடா வெளியில போகணும்னு சொன்னே..எப்படி பர்மிஷன் வாங்கறது.
அதுக்குதான் செம்பா அண்ணிகிட்ட உதவி கேட்கலாம்னு அவங்க கைன்னு நினைச்சு பிடிச்சுட்டேன்னு சொல்றா.
மறுபடியும் செம்பாவைப்பார்க்க,செம்பா உனக்கு புரியலையா.. வினோ உன்கிட்டத்தான் பேசணும்னு துடிக்கறான்னு அம்மா சொல்றாங்க.. சரி பெரியம்மான்னு வினோவை அழைச்சுக்கிட்டு போனா, வினோ அதைப்பத்தி மட்டும் என்கிட்ட கேட்காத..எனக்கு வெட்கமா இருக்குன்னு சொல்றா செம்பா.
ஐயோ அண்ணி அதைப்பத்தி எல்லாம் கேட்கலை.. மாமாவும், அத்தையும் எங்க ஹனிமூனுக்கு ஈசிஆர்ல காட்டேஜ் புக் பண்ணி வச்சிருக்காங்களாம். அங்க போக நீங்கதான் எங்களுக்கு உதவி செய்யணும்னு சொல்றா.
ஒரு ஐடியா பண்ணலாம்னு சொல்லிட்டு,இரு பியூஸ் கேரியரை பிடுங்கிட்டு கரண்ட் இல்லை..பாவம் புதுப்பொண்ணு மாப்பிள்ளையை வெளியில அனுப்பலாம் பெரியம்மான்னு சொல்றேன்.. சரியான்னு சொல்லிட்டு பிடுங்கி விட்டுடறா.
உள்ளே வந்து இப்போதைக்கு பவர் வராதுன்னு நடிக்கறா..இதுக்குள்ள வெளியில போயிட்டு வந்த கார்த்திக்,என்னடா இது பியூஸ் கேரியரை பிடுங்கி விட்டு இருக்காங்கன்னு நினைச்சுகிட்டே,எவன் பார்த்த வேலைடா இதுன்னு சொல்லிட்டு போட்டு விடறான்.பவர் வந்துடுது..
செம்பாவும், வினோதினியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து தலையில கை வச்சுக்கறாங்க...