பேசக் கூடாது... சிரிக்க கூடாது.. அப்றம் நான் என்னதான் செய்ய.. அலுத்துக் கொண்ட ரம்யா பாண்டியன்!
சென்னை: விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு சீசன் 9 நிகழ்ச்சியில் நடுவர்களின் ஒருவராக இருக்கும் ரம்யா பாண்டியன்...அவர் சிரிக்க கூடாதுன்னு சொல்றார்....
இவங்க யார் கூடயும் பேசக் கூடாதுன்னு சொல்றாங்க.. அப்போ இந்த ஷோவில் எனக்கு என்னதான் வேலை என்று அழகுப் பதுமை ரம்யா பாண்டியன் ரொம்பவே சலித்துக்கொண்டார்.
பலரின் கோபப் பார்வையும் வனிதா விஜயகுமார் மீதும், ஆதவன் மீதும் பாய்ந்தது.. இப்படியே போனால் அடுத்து ரம்யா பாண்டியன் ஆர்மிதான்னு சொல்ற அளவுக்கு நிலைமை ஆகிப்போச்சு.
ரம்யாவுக்கு ஒற்றை ரோஜா
ரம்யாவுக்கு போட்டியாளர் ஒருவர் ஒற்றை ரோஜா கொடுத்தார். அதை ரம்யா சிரித்தபடி வாங்கிக்கொள்ள, ஏய்... யார் ரோஜா கொடுத்தாலும் வாங்கிப்பியா? என்னதான்டி பிரச்சனை உனக்கு என்று வனிதா விஜயகுமார் அவர் மீது பாய்ந்தார். ரம்யா கூல் ரம்யாவாக, யார் அன்போடு குடுத்தாலும் வாங்கிக்கலாம் தப்பில்லை என்கிறார்.
முத்து ஜோக்ஸ்
முத்து அவ்வப்போது உதிர்த்து வரும் சின்ன சின்ன காமெடிகளையும் கேட்டு ரம்யா பாண்டியன் ரசித்து சிரித்து வந்தார். திடீரென ஆதவன் எழுந்து அவர் என்ன காமெடி சொன்னாலும் சிரிப்பியா? உன்னை சிரிக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல என்று சொன்னார். இதற்கும் ரம்யா பாண்டியன் சிரித்துக்கொண்டே இருந்தார்.
முத்து ஜோக்ஸ்
முத்து ஜோக்கை சொல்லும்போது யதார்த்தமாக ரம்யா சிரிக்காமல் இருக்க, ஜோக் சொன்னா சிரிக்கணும்னு முத்து சொன்னார். நீங்க ஜோக் சொன்னா சிரிக்கக் கூடாதுன்னு ஆதவன் சொல்றார்... யாருகிட்டேயும் பேசக் கூடாதுன்னு வனிதா சொல்றாங்க.. அப்போ இந்த ஷோவில் எனக்கு என்னதான் வேலை என்று கேட்டார் ரம்யா.
டென்ஷன் ஆன முத்து
மதுரை முத்து டென்ஷன் ஆனார்.. என்னப்பா நீ வேலை பார்க்கறே.. நான் ராத்திரி எல்லாம் ஜோக்கை யோசிச்சு வச்சுட்டு, ரம்யா பாண்டியன் இந்த ஜோக்குக்கு சிரிப்பாரான்னு கற்பனை பண்ணி வச்சு இருக்கேன்.. நீ எதுக்குப்பா இந்த வேலை பார்க்கறேன்னு சொன்னார். இப்படி இவர்கள் காமெடியே பெரும் காமெடியா இருக்கு.