பளபளக்கும் ஆடை அணிந்து.. பவ்ய பார்வையால்.. பாடாய் படுத்தி எடுக்கும் ரம்யா பண்டியன்
சென்னை: பவ்யமான சிரிப்பால் சாந்த சொரூபிணியாக மாறி பளபளக்கும் ஆடையுடன் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் பார்வையைப் பார்த்து திணறடித்து வருகிறார் ரம்யா பாண்டியன்.
அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. ரம்யா பாண்டியன் பெயரை சொன்னாலே இன்ஸ்டாகிராமில் தெரியாத ரசிகர்களே இல்லை.
அந்த அளவிற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை தன்வசப்படுத்தி ஒரு போஸ்டரில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த வைத்தவர்.
சூப்பர் எனர்ஜி
தற்போது மீண்டும் அதே எனர்ஜியோடு திரும்ப வந்திருக்கிறார் .அவர் தற்போது போடும் போஸ்ட்களை வரவேற்று அவருடைய ரசிகர்களும் அவருடைய போட்டோக்களுக்கு லைக்குகளும் கமெண்டுகளும் மழை போல வாரி வழங்கி வருகிறார்கள் . எத்தனை புதுமுகங்கள் வந்தாலும் என்னுடைய இடத்தில் யாரும் வரமுடியாது இன்ஸ்டால்வின் இளவரசி நான் மட்டும்தான் என்று சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் இவர்.
அருமையான போட்டோஷூட்
இந்த நிலையில் பிக் பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு மீண்டும் போட்டோ ஷூட்டை ஆரம்பித்திருக்கிறார். தற்போது இருக்கும் போட்டோஷூட் மோகத்தை முதல் முதலில் ஆரம்பித்து வைத்தவர் இவர் தான். இவரை பின் தொடர்ந்து தான் தற்போது சீரியல் பிரபலங்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை அனைவரும் போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
யார் வந்தாலும் டோன்ட் ஒர்ரி
எத்தனை பேர் வந்தாலும் இவரை மாதிரி யாராலும் பாப்புலராக முடியவில்லை. அந்த அளவிற்கு போஸ்டில் அனைவரையும் பின்னுக்குத்தள்ளி முன்னாடி வந்து விட்டார். இதுவரைக்கும் ஸ்லிம்மாக இருப்பது தான் அழகு என்று கருதி வந்த ரசிகர்கள் கூட இவருடைய இடுப்பு மடிப்பை பார்த்து மயங்கிப் போய் விட்டனர். இவர் சினிமாவில் வருவதற்கு முன்னர் ஒரு நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்து கொண்டிருந்தார்.
பொன் மானே
அதிலிருந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வாளராக பதவி உயர்வு கிடைத்த நிலையில் தான் அவருக்கு மானே தேனே பொன்மானே என்னும் ஷார்ட்பிலிம் மேல் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நடிகையாக வேண்டும் என்று இவர் அடிக்கடி போட்டோஸ்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துகொண்டிருந்தார்.
ஜோக்கர் வாய்ப்பு
இந்தநிலையில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முன்னுக்கு வந்தார் .அதற்குப் பிறகு ஜோக்கர் என்னும் திரைப்படத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு வந்ததும் சந்தோஷமாக ஓகே சொல்லிவிட்டார். ஜோக்கர் படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து தான் ஆண் தேவதை என்னும் படத்தில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு தாயாக நடிக்க விருப்பமா என்று சமுத்திரக்கனி கேட்டிருக்கிறார்.
தாயாக நடிக்கும் வாய்ப்பு
திருமணமே செய்து கொள்ளாத நிலையில் ஒரு தாயாக நடிக்கும் வாய்ப்பு வந்தாலும் ஓகே என்று சொல்லி இவரும் அதற்கு ஓகே சொல்லி அந்த படத்தில் தனது திறமையை நிரூபித்து இருந்தார். திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விடவும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு பெரும் பிரபலமாகிவிட்டார் .அதன் பிறகுதான் இவருக்கு குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது.
பிசி பிசி
அதில் மட்டுமில்லாமல் கலக்கப்போவது யாரு சீசன் 9 நிகழ்ச்சியிலும் கலந்து இருக்கிறார் .இதில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும்போது தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் நாளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிக்பாஸில் இவருடைய ரசிகர்கள் இவருக்கு பெரும் ஆதரவு கொடுத்து கடைசி வரைக்கும் இந்த வீட்டிற்குள் இவரை இருக்க வைத்தனர் .
களத்தில் கலக்கல்
அதுவும் இல்லாமல் இந்த வீட்டை விட்டு வெளியே வரும்போது கூட வெளியே இவருடைய ரசிகர்கள் இவருக்காக கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் பண்ணி என்ஜாய் பண்ணி இருந்தனர்.இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது சமூக வலைத்தளங்களில் போஸ்ட் போடாமல் அவருடைய ரசிகர்களை காயவிட்டு இருந்தார். தற்போது வெளியே வந்ததும் மீண்டும் களத்தில் இறங்கி தன்னுடைய வேலையை ஆரம்பித்துவிட்டார்.
கிறங்கடிக்குதே
லேட்டஸ்டாக இவர் பல பலக்கும் ஆடையில் கலக்கலான போஸ் கொடுத்து ரசிகர்களை பாடாய்படுத்தும் கிறங்கடிக்கும் பார்வையால் திணற வைத்து இருக்கிறார் இதை பார்த்து பலர் என்ன கமெண்ட் போடுவது என்று தெரியாமல் தீப்பொறி சிம்பிள் போட்டு சூடாகி வருகிறார்கள்.