For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரம்யா பாண்டியன் வாயில அப்படி என்னதான் இருக்கு ஆதவா.. !

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு சீசன் 9ல் கலந்துக்கொண்ட ரம்யா பாண்டியனுடன் ஆதவன் சேர்ந்து தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ பாடலை பாடினார். ரம்யாவின் கையை பிடிச்ச ஆதவன் விடவே இல்லை.

தென்றல் வந்து தீண்டும்போது பாடலை மிக அருமையாக பாடிய ரம்யாவை தென்றல் தீண்டவில்லை...ஆதவன்தான் உரசிக்கொண்டு நின்றார்.

அவர் முகத்தையே கேவலமா பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டே பாடினார் ஆதவன். இவ்வளவு காலம் ஃபீல்டில் இருந்தும் இதுதான் காமெடி என்று நினைத்துக்கொண்டு இருக்கும் ஆதவன் ஐயோ பாவம்.

ப்ரோமோ போடுவோம்

ப்ரோமோ போடுவோம்

தென்றல் வந்து தீண்டும்போது பாடலை ரம்யா பாண்டியன் ஆதவனுடன் சேர்ந்து இனிமையாக பாடிக்கொண்டு இருந்தார். ஆதவன் ரம்யாவின் முகத்தையே பார்த்துக்கொண்டு பாடலை பாடினார். பின்னர் அவரது கையைப் பிடித்துக்கொண்டே அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தார்.இந்த காட்சியை ப்ரோமோ போடுவோம் என்று ஈரோடு மகேஷ் சொன்னார்.

நீதான்மா போல்டு

நீதான்மா போல்டு

வனிதா விஜயகுமார் இது குறித்து கூறுகையில், என்னை எல்லாரும் போல்டு போல்டுன்னு சொன்னாங்க. நான் போல்டு இல்லைம்மா நீதான் என்று வனிதா ரம்யாவுக்கு கைக் கொடுத்தார். மதுரை முத்து.. நல்லா பாடினீங்க ரம்யா..முதலில் ஜட்ஜா வந்தீங்க.. இப்போ படகியாவும் ஆகிட்டீங்க.. அடுத்து ஆடியன்ஸை நாம் தேட வேண்டியதுதான் என்று சொன்னார்.

இனி பாட மாட்டேன்

இனி பாட மாட்டேன்

அச்சச்சோ.. இனி பாட மாட்டேன் என்று சொல்லி பார்வையாளர்களிடம் சாரி சரி என்று சொன்னார் ரம்யா பாண்டியன். கலக்க போவது யாரு சீசன் 9 க்கு ஜட்ஜாக வந்து இருக்கும் ரம்யா பாண்டியன் இதற்கு முன் குக்கு வித் கோமாளியின் பங்கேற்று இருந்தார். அப்போது இவரை வைத்து புகழ், பாலா இருவரும் காமெடி செய்தார்கள். இவர்கள் வளரும் பிள்ளைகள்.. ரம்யாவிடம் ஜொள்ளு விடும்போது விரசமாகத் தெரியவில்லை.

ஆதவன் ஜொள்ளு

ஆதவன் ஜொள்ளு

இத்தனை வருடம் ஃ பீல்டில் இருந்து வரும் ஆதவன் விடலைப் பசங்க ரேன்ஞ்சில் ரம்யா பாண்டியனைப் பார்த்து வழிவது கேவலமாக இருக்கிறது. இதுதான் காமெடி என்று ஆதவன் நினைக்கிறார் போலும். உடன் இருக்கும் மதுரை முத்து, ஈரோடு மகேஷ் இருவரிடமும் காமெடி செய்வது எப்படி என்று கொஞ்சம் பாடம் கத்துக்கலாம்.

English summary
Ramya Pandiyan, who was attending kalakka povathu yaaru Season 9 of Vijay TV, thenral vanthu theendumpothu when Adhavan played the song. Ramya's hand is no more than a clutch.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X