இப்படி அப்படி... பாவாடை தாவணியில்.. மிரட்டும் ரவீனா
சென்னை: இதுவரைக்கும் சீரியல்களில் குழந்தையாக நடித்துக்கொண்டிருந்த ரவீனா தற்போது தாவணி போட்ட பருவப் பெண்ணாக களத்தில் இறங்க இருக்கிறார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் கமெண்டுகளை கொட்டி வருகிறார்கள்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் மௌன ராகம் இரண்டில் சக்தி கேரக்டரில் ரவீனா டாடா நடித்துக்கொண்டிருக்கிறார்.
பாவாடை தாவணியில்
இந்த சீரியல் இன்றிலிருந்து ஒளிபரப்பப்படும் நிலையில் சீரியலில் மட்டும்தான் நான் குடும்ப குத்து விளக்கு பாவாடை தாவணியில் வலம் வருவேன் இன்ஸ்டாகிராம் பக்கம் வந்து பாருங்க எனது சுயரூபத்தை என்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அவருடைய போட்டோக்களை பார்த்து கொஞ்சி தீர்க்கும் ரசிகர்கள் என்ன மாதிரி கமெண்ட் போடலாம் என்று யோசித்து ஹாட்டின்களை அள்ளி வீசி வருகிறார்கள் .
சக்தி கேரக்டர்
இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரம் சக்தி கேரக்டர்தான் .அதனால் இவர் இந்த சீரியலில் கதாநாயகியாக களமிறங்கியிருக்கிறார். முதல் சீசனில் முழுக்க முழுக்க கதை சக்தியை சுற்றி வந்ததால் இரண்டாவது சீசனிலும் இவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர். ரவீனா சீரியல்களில் அறிமுகமாவதற்கு முன்பாகவே திரைப்படங்களில் அதுவும் விஜய்யின் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
பாசக்கார தங்கச்சி
அதுமட்டுமல்லாமல் ராட்சசன் படத்திலும் விஷ்ணு விஷால் உடன் பள்ளி குழந்தையாக நடித்திருந்தார் .அதற்கு பிறகுதான் இவர் ஜீ தமிழில் பூவே பூச்சூடவா சீரியலில் சக்தியின் தங்கச்சியாக நடித்துக்கொண்டிருந்தார். அதுவும் இந்த சீரியலில் இவர் வீட்டின் கடைசி செல்ல பொண்ணாகவும் வாயாடி யாகவும் நடித்திருப்பார் .இந்த சீரியலின் ரசிகர்கள் பலர் இவரை அதிக பிரசங்கி என்று கழுவி கழுவி ஊற்றி வந்தனர் .
காதலுக்கு எதிரி
இவர் மீனாட்சியின் காதலுக்கு எதிரியாக வீட்டில் போட்டுக் கொடுக்கும் நபராக இருந்ததால் சீரியலின் ரசிகர்கள் இவரை திட்டி தீர்த்தனர். ஆனால் உண்மையில் இவர் அப்படி எல்லாம் இல்லையாம் .பள்ளி படிக்கும் குழந்தையாக இருந்தாலும் இவர் காதலுக்கு எப்போதுமே சப்போர்ட் தான் .அது மட்டுமல்லாமல் நான் எனது லைஃபில் காதல் தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறியிருந்தார் .
மீண்டும் விஜய் டிவி
தற்போது மீண்டும் விஜய் டிவியில் களமிறங்க இருக்கும் இவர் பாவாடை தாவணியில் கிராமத்து பெண்ணாக மாறியிருக்கிறார் . ஆனால் இவர் இன்ஸ்டாகிராமில் வெறித்தனமாக மாடல் உடையில் ரசிகர்களை திக்குமுக்காட செய்திருக்கிறார். அரை டவுசர் ரோடு தொடை தெரிய ஒய்யார போஸ் கொடுத்து ரசிகர்களை பெருமூச்சு விட வைத்த இவர் இன்ஸ்டாகிராமில் இளவரசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பலர் நடித்து வாங்கும் பெயரை இவர் அசால்டாக ஒருசில போட்டோக்களில் பெற்றுவிட்டார் .
செம பாப்புலர்
இவருடைய போட்டோவை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு இவரைப் பாப்புலராகி விட்டார் .இவர் முதல் முறையாக கருப்பு கலர் சேலையில் குஷி படத்தின் டயலாக்கு அழகாக தன்னுடைய குட்டி இடுப்பை காட்டி நடித்து இருந்தார் .இதைப் பார்த்து மிரண்டுபோன நெட்டிசன்கள் தங்களுடைய பங்குக்கு நன்றாகவே வைத்து செய்து விட்டார்கள். அதற்குப் பிறகுதான் இவர் யாரென்று பலருக்கு தெரிய ஆரம்பித்தது யார் இந்த பொண்ணு என்று பலரும் தேடி பார்க்க ஆரம்பித்தார்கள் .அதற்குப் பிறகுதான் இவர் படங்களில் நடிப்பதும் சீரியல்களில் நடித்ததும் கூட வெளியே வந்திருக்கிறது.