Run serial: யார் கூட நடிச்சாலும் பிரச்சனை... கடைசியில் ரியல் ஜோடியே...!
சென்னை: சீரியல் நடிகர் கிருஷ்ணாவுக்கு யாருடன் ஜோடி சேர்ந்து நடித்தாலும் குடும்பத்தில் பிரச்சனை வருவதால் கடைசியில் ரியல் ஜோடியுடன் சேர்ந்து நடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
ஆனந்த புரத்து வீடு படத்தில் நடிக்கும்போது காதல் வயபட்டு திருடா திருடி நடிகை சாயா சிங் நடிகர் கிருஷ்ணா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கிருஷ்ணா பெரிதாக பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்தவர், விகடன் டெலிவிஸ்டாஸ் தெய்வமகள் சீரியல் மூலம் பெரும் புகழ் அடைந்தார்.
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் சத்யா பிரகாஷ் ஜோடி சீரியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் புகழ் அடைந்தது. நகைக் கடைத் திறப்பு விழாக்கள் மேடைகள் என்று இந்த ஜோடிகளை அழைத்து கடைகள் கல்லா கட்டின.
ஜோடி பொருத்தம்
சீரியலில் இந்த ஜோடி பொருத்தம் பிரமிக்க வைத்த நிலையில், வீட்டில், பிளவு, மன வருத்தம் என்றும் கிருஷ்ணா பல இன்னல்களுக்கு உள்ளானார். என்றாலும் சாயா சிங்கை சமாளித்து தெய்வ மகள் சீரியலை சமாளித்து தராசின் சம நிலை முள்ளாக நின்று நடித்தார்.
கிருஷ்ணா நல்லவர்
கிருஷ்ணா பெண்களுக்கு பிடித்த மாதிரியான நல்ல குணமானவர். இதனால் வாணி போஜனுக்கு கிருஷ்ணா மனதுக்கு பிடித்தமானவராக மாறிப் போயிருந்த நேரத்தில் சாயாசிங், இதை தவறாக நினைக்கும் மன போக்குக்கு மாறி இருந்தார்.
மன கசப்பு
இதனால் வீண் மன உளைச்சல், மன கசப்பு என்று இருந்த நேரத்தில்தான் எதற்கு வீண் வன்பு என்று விகடன் டெலிவிஸ்டாஸ் அவசரஅவசரமாக சீரியலை முடித்துக் கொண்டது.இதன் பிரதி பலிப்பு சீரியலில் கூட தெரிந்தது. தாடி வளர்வதற்கு கூட கால அவகாசம் கொடுக்காமல் காமெடியில் கிளைமேக்ஸ் காட்சிகள் முடிந்தன.
ரன் சீரியல்
அடுத்து ரன் சீரியலில் கிருஷ்ணா நடிக்க இவருடன் சரண்யா ஜோடி சேர்ந்திருந்தார். சரண்யாவுக்கு சாயாசிங் அதே டார்ச்சரை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தொல்லை தாங்க முடியாமல்தான் இனி வேறு நடிகரையும் தேர்ந்தெடுக்க முடியாமல் ரியல் ஜோடியையே நடிக்க வைத்து உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.