இப்படி காற்று வாங்கி காட்டுனா.. எதை ரசிக்கிறது.. கலக்கறீங்க அண்ணியாரே!
சென்னை: தெய்வமகள் சீரியல் மூலமாக "அண்ணியார்" ஆக ரசிகர்களின் மனதில் உலா வந்து கொண்டிருக்கும் ரேக்கா கிருஷ்ணப்பா கடற்கரையில் காற்று வாங்கி ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் அழகழகான போட்டோக்களை தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
ரேகா கிருஷ்ணப்பா தெய்வமகள் சீரியலில் காயத்ரி எனும் கேரக்டரில் வில்லத்தனத்தை காட்டி மிரட்டியிருக்கிறார். இந்த சீரியலில் இவர் காயத்ரி என்னும் பெயரில் உலா வந்தாலும் பிரகாஷின் அண்ணியாக தான் பலர் இவரை கூப்பிட்டு கொண்டிருக்கின்றனர்.
அவர் அந்த சீரியலில் மிரட்டலாக இவரை என்ன அண்ணியாரே என்று கூப்பிடும் தோரணை பல ரசிகர்களுக்கும் பிடித்திருந்ததால் அனைவரும் இவரை அண்ணியார் என்றுதான் செல்லமாக அழைத்து வருகின்றனர்.
லேடி நம்பியார்
தெய்வமகள் சீரியல் தொடர்ந்து இவர் நந்தினி சீரியலிலும் வில்லத்தனத்தை காட்டி லேடி நம்பியார் ஆக தான் தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மனதில் இடத்தை பிடித்திருக்கிறார். பல வில்லிகள் இருந்தாலும் இவர்தான் ஸ்பெஷலாக அனைவர் மனதிலும் வில்லத்தனம் தோடு கூடிய ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.
சூப்பர் வில்லத்தனம்
இவருடைய கம்பீரமான உடலமைப்பும் முக அமைப்பும் இவருக்கு கச்சிதமாக கேரக்டருக்கு 100% பொருந்துகிற மாதிரி இவருடைய நடிப்பும் இருப்பதால் வில்லி என்று கூறினாலே இவருடைய வில்லத்தனம் தான் ஞாபகத்துக்கு வருகிறார். வில்லத்தனத்தால் மட்டுமல்ல அழகாலும் இவர் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
ஆளைக் காணோம்
தற்போது கொஞ்ச நாட்களாக இவரை டிவியில் காணாது தவித்துக்கொண்டிருந்த இவருடைய ரசிகர்களுக்கு இவர் இன்ஸ்டாகிராம் மூலமாக கண்களுக்கு குளுமையை காட்டி வருகிறார் .சீரியல்களில் வில்லியாக கலக்கிக் கொண்டிருந்த இவர் உண்மையிலேயே ரொம்பவும் அமைதியான சுபாவம் கொண்டவர். அவரது கணவரை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு கணவர் நடிப்பதற்கு பச்சைக்கொடி காட்டியதால் தான் நடிப்பதற்கு மீண்டும் வந்திருக்கிறாராம்.
மாட்லாடப் போயிட்டார்
இவர் தெலுங்கு சீரியலில் செமையாக இப்போதும் கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் தமிழில் சீரியல்களில் எதுவும் இல்லாததால் கிடைக்கும் நேரங்களில் பீச் கடற்கரை என்று சுற்றி போட்டோக்களாக எடுத்து குவிக்கிறார். அதுவும் முட்டுக்கு மேலே ஒரு டாப் போட்டு அதுவும் முதுகெல்லாம் சூம் பண்ணி பார்க்காமலே எல்லாம் தெரியிற மாதிரி ரசிகர்களுக்கு குளுமையை காட்டி கடற்கரையில் அலைகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் போட்டோக்களை அவருடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் .
செம கூல்
இவர் இதை பார்த்ததும் பல ரசிகர்கள் உச்சிக் கொட்டி ரசித்து புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் பலர் அண்ணியாரே சீக்கிரமா சீரியல்களில் மீண்டும் வாங்க உங்களுக்காக தவித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறுகிறார்கள். எவ்வளவுதான் வில்லத்தனத்தை காட்டினாலும் புசுபுசுவென்று இருக்கும் இவரை ரசிகர்கள் நன்றாகவே ரசிக்கிறார்கள்