Azhagu Serial: காதலுக்கு மரியாதை குடுக்கணும்.. எந்த காதலுக்கு?
சென்னை: அழகு சீரியலில் முதல் காதலி வந்துவிட இரண்டாவது காதலியுடன் நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்த சொல்கிறான் திருநா
இப்போ சொல்லுங்கள் காதலுக்கு மரியாதை என்றால் எந்த காதலுக்கு மரியாதை? இரண்டுமே காதல்தானே...
பாவம் அர்ச்சனா.. கல்யாண மேடை வர வந்துவிட்ட பின்னர் இந்த கல்யாணத்தை நிறுத்துங்க என்று கத்துகிறான் திருநா.
அழகு சீரியல்
சன் டிவியின் அழகு சீரியலில் இறந்துவிட்டாள் என்று அக்காவின் கணவன் சொல்லியதை நம்பிவிட்ட திருநாவின் குடும்பம், திருநாவை காதலிச்ச அர்ச்சனாவை திருநாவுக்கு கல்யாணம் செய்துவைக்க முடிவு பண்றங்க. திருநாவும் சம்மதிக்கிறான். அர்ச்சனாவை காதலிக்கவும் ஆரம்பிக்கறான்.
ஆழகம்மை மகன்
திருநா அழகம்மையின் கடைசி மகன். காணாமல் போன நிவி, அக்கா புருஷன் மாமாவிடம் இருந்து போலீஸ் உதவியோடு தப்பிச்சு, ஒரு வழியாக திருநவை தேடி கண்டு பிடிச்சு கல்யாண மணடபத்துக்கு வந்துடறா.
அழகம்மை பேசுவது
அழகம்மை ஒரு அம்மாவாக இந்த இடத்தில் பேசுவது சரியா என்று தெரியவில்லை. அர்ச்சனாவுடன் கல்யாணம் என்று மகன் திருநா மணமேடை வரை வந்தாகிவிட்டது. இதுவும் காதல் செய்த பெண்தான். நிவியும் காதல் செய்த பெண்தான். நிவி காணாமல் போய் இப்போது கிடைத்து இருக்கிறாள்.
திருநா முடிவு
யார் வேண்டும் என்று திருநா முடிவு எடுக்கட்டும், திருநாவை கூப்பிடுங்கள் என்று, மணமேடைக்கு நிற்கும் அர்ச்சனாவை மறந்து அழகம்மை கூப்பிடுவது சரியா என்று சீரியல் பார்க்கும் பார்வையாளர்களுக்கு தெரியவில்லை புரியவில்லை.
கல்யாண ஏற்பாடுகள் செய்துவிட்டு நிற்கும் அர்ச்சனாவின் பெற்றோர் கதி என்னாவது?அழகம்மை ?யோசிக்க வேண்டாமா? இந்த கேள்வி கடைசியில் தொக்கி நிற்கிறது.