Azhagu Serial: ஜோதிகா நல்ல முடிவு எடுக்கறாங்க.... நடிகை ரேவதி
சென்னை: சன் டிவியின் அழகு சீரியல் குடும்பத்தின் சிறப்பு கொண்டாட்டம் நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியை கடந்த இரண்டு வாரமாக மறு ஒளிபரப்பு செய்தது சன் டிவி. அப்போது பேசிய ரேவதி ஜோதிகாவைப் பற்றி பேசினார்.
ஜோதிகா வாழ்க்கையில் நல்ல முடிவுகள் எடுக்கறாங்க... பல பெண்களுக்கு அது உதாரணமாக இருக்கிறது என்றும் புகழ்ந்து கூறினார்.மகளிர் மட்டும், ஜாக்பாட் ஆகிய படங்கள் ஜோதிகா, ரேவதி இருவரும் சேர்ந்து நடித்த படங்கள்.
அப்படி ஜோதிகாவுடன் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்ததில் ரேவதி, ஜோதிகா குறித்து இவ்வாறு கூறினார். உடன் நடித்த கார்த்திக், மோகன், சுரேஷ், உலகநாயகன் கமல்ஹாசன் குறித்தும் பேசினார் ரேவதி.
சன் டிவியில் இந்த வாரம் அமர்க்களமான... பணக்காரன் வாரம்!
கார்த்திக் பலவித காதல்
கார்த்திக்குடன் மவுன ராகம் படத்தின் மூலம்தான் முதன்முதலா ஜோடி சேர்ந்து நடிச்சேன். அதற்குப் பிறகு பல படங்களில் நடிச்சோம். எனக்கும் அவருக்கும் ஒரு தனி நட்புன்னு சொல்லலாம். அவருக்கும் எனக்கும் படத்தில் கெமிஸ்ட்ரி நல்லா வொர்கவுட் ஆச்சு. கார்த்திக்கிடம் ஒரே மாதிரி காதல் இருக்காது...பல வித காதல் உண்டு என்று சொன்னார்.
எத்தனை டேக் நடிச்சாலும்
கமல் சார் கூட ஒரு கைதியின் டைரி படத்தில்தான் முதலில் ஜோடி சேர்ந்தேன். நானும் அவரும் பீச் ரோட்டில் ஜீப்பில் போகும் காட்சி படமாக்கப்பட்டது. ஜீப்பில் ரெண்டு பக்கமும் கேமிரா. இந்த காமிராவுக்கும் நடிக்கணும்.. இந்த காமிராவுக்கும் நடிக்கணும். நான் எத்தனை டேக் எடுத்த போதும், அவரது நடிப்பு ஒரே மாதிரிதான் இருக்கும். அப்படி சிறப்பாக நடிக்க கூடியவர் அவர் என்று கூறினார்.
அஜீத் பிரபு தேவா
அஜீத்தை அவர் சின்ன பையனா இருந்தப்பவே பார்த்து இருக்கேன். நாங்க புதிய முகம் படம் எடுத்தப்போ அஜீத் சின்ன பையன்...எனக்கு அவர் இன்னும் ரொம்ப ரொம்ப சின்ன பையன்தான்..ஹி ஈஸ் எ பாய் என்று சொன்னார். பிரபு தேவா மவுன ராகம் படத்தில் சுந்தரம் மாஸ்டர் கூட வருவார். அப்போ சின்ன பையன்..அவரை புல்லாங்குழல் வாசிக்க வச்சு பனி விழும் நிலவு ஷாட் சூட் பண்ணினாங்க. குலேபகாவல்லி படத்தில் சேர்ந்து நடிச்சோம்.. நல்லா காமெடி பண்ணுவார் என்று கூறினார்.
ஜோதிகா எடுக்கும் முடிவு
ஜோதிகா எடுக்கும் முடிவுகள் ரொம்ப நல்லா இருக்கும். அவர் நடித்த படங்கள்...காதலித்தவரை திருமணம் செய்துக் கொண்டது.. இப்போது குழந்தைகளை வளர்ப்பது என்று அவர் எடுக்கும் முடிவுகள் நன்றாக இருக்கும். இது பல பெண்களுக்கு உதாரணமாகவும் இருக்கிறது என்று கூறினார் ரேவதி.