ஐஸ்வர்யா பைனஸ்ல்க்கு போகவே கூடாது.. கமலிடம் அதிரடியாய் பேசிய ஜனனி, ரித்விகா!
ஐஸ்வர்யா பைனல்ஸ்க்கு போகவே கூடாது என ரித்விகாவும் ஜனனியும் கமலிடம் அதிரடியாய் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஐஸ்வர்யா பைனல்ஸ்க்கு போகவே கூடாது என ரித்விகாவும் ஜனனியும் கமலிடம் அதிரடியாய் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த வாரம் கமல், போட்டியாளர்களிடம் பேசும் புரமோ வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்களிடம் யார் பைனல்ஸ்க்கு செல்லக்கூடாது என கேட்கிறார் கமல்.
நாமினேட் ஆகவில்லை
அதற்கு பதிலளிக்கும் ஜனனி, ஐஸ்வர்யாதான் என அதிரடியாய் கூறுகிறார். மேலும் இதுவரை ஐஸ்வர்யா நாமினேட் ஆகவில்லை என்றும் கூறுகிறார்.
நீடிக்கிறாரா என பார்க்கலாம்
ஒரு முறை அவர் பெயர் நாமினேட் ஆகட்டும் அதன்பின் அவர் நீடிக்கிறாரா என பார்க்கலாம் என்கிறார் ஜனனி.
காப்பாற்றப்படும் ஐஸ்வர்யா
இதேபோல் ரித்விகாவும் ஐஸ்வர்யாவின் பெயரையே கூறுகிறார். மேலும் ஒவ்வொரு முறையும் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டு விடுகிறார்.
யாஷிகா
கடவுள்தான் என்னை காப்பாற்றுகிறார் என்று ஐஸ்வர்யா கூறி வருகிறார். ஆனால் உண்மையில் ஐஸ்வர்யாவை காப்பாற்றியது அவரது தோழி யாஷிகாதான் என்கிறார் ரித்விகா.
சாமிக்குத்தம்
அதற்கு கமல் அப்படி சொல்லக்கூடாது சாமிக்குத்தமாகிவிடும் என்பதுபோல் ரியாக்ட் செய்கிறார். முதலில் ஐஸ்வர்யா நாமினேஷனுக்கு சென்று வரட்டும் பின்னர் அவர் தகுதியானவர் என ஏற்றுக்கொள்கிறேன் என்கிறார் ரித்விகா. ஐஸ்வர்யாவுக்கு எதிரான குரல் வலுத்து வருவதால் இன்றைய எபிசோட் அனல்பறக்கும் என தெரிகிறது.