சங்கமம் முடிஞ்சு போச்சு... ரோஜா லட்சுமி ஸ்டோர்ஸ் குடும்பம் பிரிஞ்சு போச்சு...!
சென்னை:சன் டியின் ரோஜா மற்றும் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல்களின் சங்கம முடிஞ்சு போச்சு.இப்போ ரெண்டு குடும்பமும் பிரிஞ்சு போச்சு.
திருவிழாவுல சண்டை வந்து பிரிஞ்ச ரெண்டு குடும்பமும் இந்த முறை திருவிழாவில் ஒண்ணு சேர்ந்துடறாங்க இதுதான் கதை
அதுக்கு இந்த வீட்டு மருமகள் கல்பனாவும், ,அந்த வீட்டு மருமகள் மகாலட்சுமியும் பிளான் போட்டு வேலை செய்யறாங்க.
யாருக்கு ஜாக்பாட் காத்திருக்கோ.. பாஜகவை வீழ்த்த இறங்கி அடிக்கத் தயாராக இருக்கும் காங்கிரஸ்!
கச்சிதமா பிளான் போட்டு கதையை நகர்த்தி ஒரு வாரத்தின் ஒரு மணி நேர எபிசோடுகளையும் ரசித்து பார்க்கும்படி கதையை கொண்டு போயிருக்காங்க.
இதுவும் பார்வையாளர்களை கவரும், அதிகரிக்க செய்யும் ஒரு யுக்திதான். கிராமம்னு சொல்லிட்டு எங்கேயும் வெளியூர் போகலை.. சென்னையில் இருக்கும் ஸ்டுடியோவிலேயே செட் மற்றும் தோட்டம் துறவு, வீடு என்று இங்கேயே சூட் செய்து இருக்கும் சாமர்த்தியத்தை பாராட்டலாம்.
இனி இது மாதிரி சங்கமம்,வெளியூர், வெளிநாடு என்று கதையை கொண்டு போனால் மட்டுமே சீரியல்களில் ஜெயிக்க முடியும் என்கிற டிரெண்ட் இப்போது வந்துள்ளது.