ஆடிய ஆட்டம் என்ன... கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன...?
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் சூர்யாவின் தங்கை ரோஜா ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டுட்டு, இப்போ பலி கடா ஆகிட்டாளே...
சூர்யாவை கேங் ரேப் பண்ண செல்வம் உதவியோட ஆட்களை ஏற்பட்டு செய்தா ரோஜா. செல்வம் எத்தனை முறை எடுத்து சொல்லியும் அவ கேட்கலை.
கடைசியில சூர்யாவுக்கு கேங் ரேப் பண்ண ஏற்பாடு செய்த ரோஜாவே அந்த வலையில மாட்டிகிட்டு பலிகடா ஆகிட்டா...பார்க்கவே பரிதாபமா இருக்கு.
மரங்களை வெட்ட கூடாது.. ஷீரடி சாய் அப்பவே அப்படி சொல்லி இருக்கார்...!
இந்த ரோஜா
ராஜாவுக்குன்னே பிறந்தவ இந்த ரோஜான்னு சொல்லி சொல்லி பல துணிச்சலான கேடுகெட்ட காரியங்களை செய்துகிட்டு இருந்தா ரோஜா.பெத்த அப்பாவையே மானம் கெட்டத்தனமா பேசினது, கொன்னுருவேன்னு மிரட்டியது கடைசி ஹைலைட்.
சூர்யா
தனக்கான ராஜாவை சூர்யா கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டுத்தான் தன்னை போலீஸ்ல மாட்டி விட்டுட்டான்னு தப்பு கணக்கு போட்டுடறா. காரணம் ராஜாவின் மீதுள்ள கண்மூடித்த தனமான காதல்தான். அதனால அக்காவை பழிவாங்க ஆவேசம் வருது அவளுக்கு.
காதலனையும்
ரோஜாவின் இந்த ஆவேசம் காதலனையும் விட்டு வைக்கலை. அவன் வீட்டுக்குள்ள புகுந்து அவனையும் அடிச்சு துவைக்கறா. ராஜாவின் குருவையும் கட்டிப்போட்டு மிரட்டறா.
நடு காட்டில்
போலீசுக்கு பயந்து செல்வத்துடன் நடு இரவில் நடுகாட்டில் தஞ்சம் புகுந்த ரோஜா, அக்கா சூர்யா பத்தினியா இருந்தா அவ ஏன் என் ராஜாவை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொல்லணும். அவதான் கோபியை காதலிக்கறாளே..அப்போ சமயத்துக்கு யார் கிடைச்சாலும் இவளுக்கு ஓகேவான்னு கேட்கறா.
சூர்யாவை கேங் ரேப்
அதனால, சூர்யாவை கேங் ரேப் செய்ய ஆட்களை அழைச்சுகிட்டு வர சொல்றா.அவன் சரக்கு, பிரியாணின்னு வாங்கிட்டு ஆட்களையும் அழைச்சுக்கிட்டு வந்துடறான்.
செல்வம்
செல்வத்தை ஒரு நாள் ரோஜா புரட்டி போட்டு அடிச்சதில் வெறியில் இருந்த அவன், இதுதான் சான்ஸுன்னு இன்னிக்கு பழிவாங்க துடிக்கறான். அப்புறமென்ன அக்கா சூர்யாவுக்கு கேங் ரேப் நடக்க ஆரம்பிச்சு வச்ச வலையில் ரோஜாவே விழுந்து காமுகன்களுக்கு பலி கடா ஆகிட்டா
பார்க்க பரிதாபமா
பார்க்க பரிதாபமா இருக்கு... எல்லாருக்கும் கருத்து சொல்வதாவும், மனசை மாத்துவதாவும் கல்யாண வீடு சீரியலின் காட்சிகள் இருக்கு எதில் வேணும்னாலும் நமக்குத் தேவையான நல்லது கண்டிப்பா இருக்கும். நாமதான் அதைப் பார்த்து எடுத்துக்கணும்..