Roja serial: ரோஜா.. இடம் இல்லேன்னா மாமன் மடி இருக்குல்ல உட்காரு!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது.அதை ஒரு நாள் பார்க்க முடியாவிட்டால்கூட மனைவியிடம், அம்மாவிடம் கதை கேட்கும் ஆண்களும் இருக்கிறார்கள்.
நல்ல கற்பனை கதை இருந்தால் அதை கலை போல ரசிப்பதில் ஆண், பெண் பேதமில்லை. ஆணுக்கு ஒரு வாழ்க்கை,பெண்ணுக்கு ஒரு வாழ்க்கை என்று தனித்தனியாகவா இருக்கிறது?.
அதனாலதான் இந்த ரோஜா சீரியல் இரு பாலரையும் வெகுவாக கவர்ந்து இருக்கிறது. இவர்களில் முக்கால்வாசி ஆண்கள் பார்க்கும் நேரத்திலும் சீரியல் ஒளிபரப்பாகுது.
கோயிலுக்கு குடும்பத்துடன்
அன்னபூரணி அம்மா 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர அட்டிகையை குல தெய்வத்துக்கு சாத்தப் போகிறேன் என்று சொல்லி கோயிலுக்கு கிளம்புகிறார்கள். ரோஜாவை அன்னபூரணி அம்மாவின் மூத்த பேரன் கல்யாணம் செய்து இருக்கான்.அந்த பொண்ணு அம்மா அப்பா யாரென்று தெரியாமல் ஆஸ்ரமத்தில் வளர்ந்த அழகான பெண்.
நம்ம குடும்பம்
பாட்டி அன்னபூரணி அம்மா ரோஜ குல தெய்வம் கோயிலுக்கு வேணாம்.அவ நம்ம குடும்பத்து பொண்ணு இல்லை.என்ன குலமோ, கோத்திரமோ .அதனால் அர்ஜுன் வந்தால் வரட்டும், இல்லை பொண்டாட்டி வரலேன்னு அவனும் வரலேன்னா போகட்டும்னு சொல்லி, ஏற வந்த ரோஜாவைத் தள்ளி விட்டுட்டு கிளம்பாறங்க
ஸ்டெப்னி இல்லை
வழியில் குடும்பம் அனைவரும் சென்ற கார் பஞ்சர் ஆயிருச்சு.அதில் ஸ்டெப்னியுமில்லை. நடு ரோட்டில் வெயிலில் நிற்கிறார்கள்.தூரத்தில் ஒரு வேன் வருது.அதில், அர்ஜுனும், ரோஜாவும் மட்டும் தனியாக ரொமான்ஸ் செய்தபடி வருகிறார்கள். அதை நிறுத்தி லிஃபிட் கேட்க, வண்டியில ரெண்டு பேரு இருக்காங்கம்மா.அவங்க சொன்னால்தான் நான் ஏத்திக்க முடியும்னு சொல்றார் ஓட்டுநர்.
ஓ.. இவங்கதானா?
சரி,சரி..ஏறட்டும்னு சொல்லி எல்லாரையும் ஏத்திக்கறான்.கடைசியில் ரோஜாவுக்கு இடம் இல்லை.ரோஜா ஏன் நிக்கறே உட்காருன்னு சொல்ல,இடமில்லை சார்னு சொல்றா ரோஜா. அதுக்கென்ன..என் மடிதான் காலியா இருக்கே.மாமன்மடியில உட்காரு பொண்டாட்டின்னு இழுத்து உட்கார வச்சுக்கிட்டு, பாட்டி முன்னால் அவளை கட்டிப் பிடிப்பது, முத்தம் தருவது ,காதில் பேசுவது, காதில் ஊதுவது என்று ரொமான்ஸ் செய்து கொண்டே வர...