Roja Serial: பாம் வெடிச்சு இருக்கு... கன்டென்ட் வேணும்னு தாமதப்படுத்துவீங்களா?
சென்னை: வீட்டின் பூஜை ரூமில் பாம் வெடிச்சு இருக்கு. ரோஜா பாதிக்கப்பட்டு சரியாகிட்டா. ஆனால், கண் தெரியலை. அதில் கன்டென்ட் எடுக்க போலீசில் புகார் அளிக்க தாமதம் செய்வீங்களா?
சன் டிவியின் ரோஜா சீரியலில் ரோஜா அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்தவள். அர்ஜுன் அவளை கல்யாணம் செய்துகொண்டு வந்து தனது அழகிய குடும்பத்தை காண்பிக்கிறான்.
அன்றிலிருந்து அவள் குடும்பத்தின் ஒவ்வொருவர் மீதும் அவள் காண்பிக்கும் அன்புக்கு அளவே இல்லை. யார் அன்பு காண்பித்தாலும் அவர்கள் பின்னால் ஒரு நாய்க்குட்டி மாதிரி அன்பை காண்பித்து அலைவாள்.
பாம் வெடிக்குது
பூஜை அறையில் அணு ரோஜாவுக்கு வைத்த பாம் வெடிக்குது. ரோஜாவுக்கு வைத்தியம் பார்த்து, அவளின் கண்ணில் கண்ணாடித் துகள்கள் செருகி தற்போதைக்கு பார்வை வராது. படிப்படியாக வைத்தியம் முயற்சிக்கலாம் என்று டாக்டர் சொல்றார். அப்போது வெடித்து சிதறி அழும் ரோஜாவின் நிலைமை ரொம்ப பரிதாபமாக இருக்கிறது.
Kanmani Serial: பொன்னுமணி பாடல் காட்சியும் கண்மணியில் கண்டாச்சுங்க!
அர்ஜுன் அன்பு
வீட்டுக்கு வந்து ரோஜாவுக்கு அவள்புருஷன் எல்லாத்தையும் சொல்லி சொல்லித் தர்றான். ரோஜா குளிக்கும்போது இதோ பாரு இங்கே தண்ணி இருக்கு..இங்கே சோப் இருக்கு..ஷாம்பூ இருக்கு.பயப்படாம நிதானமா குளிச்சுட்டு வான்னு சொல்லித் தர்றான்.சாப்பாடு ஊட்டி விடறான். பார்க்க இதமா இருக்கு.. ரோஜாவும் தனக்கு பார்வை போன குறை தெரியாம சரி சார்.. நானே குளிச்சுப்பேன்னு சொல்றதும் நல்லாருக்கு.
இது டூ டூ மச்
கண் தெரியாத ரோஜாதான் நமக்கு இப்போதைக்கு சரியான என்டெர்டெயின்மென்ட் என்று சொல்லி, சீரியல் பார்க்கறவங்களை வெறுப்பேத்தறாங்க. சாப்பாட்டில் விஷத்தை கலந்து வைக்க திட்டம் போடறாங்க. இதெல்லாம் டூ டூ மச்சா இருக்குது.
அறையில் பாம்
வீட்டின் பூஜை அறையில் பாம் வெடிச்சு இருக்கு. எப்படி வெடிச்சு இருக்கும்னு கிரிமினல் லாயர் உடனே போலீசுக்கு கம்ப்ளெயிண்ட் குடுக்க வேணாமா? உங்களுக்கு இது மாதிரி ரோஜா சோத்துல விஷம் வைக்கற மாதிரி கன்டென்ட் வேணும்னு எல்லாத்தையும் தாமதப் படுத்துவீங்களா?