Roja Serial: ரோஜா சீரியல்... சினிமாவை விஞ்சும் காட்சி!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் ரோஜாவை கடத்தி வச்சி இருக்கும் இடத்தை ஒரு க்ளூ இல்லாமல் கண்டு பிடிக்கிறான் அர்ஜுன்.
அதோடு, ஹீரோயிசத்தோடு சண்டை போடுகிறான் பாருங்கள்.. எதிரிகள் பறக்கிறார்கள்.
ரோஜா சீரியல் சினிமா பாணியில் இருக்கிறது என்று சொன்னாலும் சொன்னோம்.. சினிமாவையும் விஞ்சுகிறது.
க்ளூ இல்லாமல்
ரோஜாவை சாக்ஷி ஆள்வச்சு கடத்தி விடுகிறாள். ரோஜாவை கரண்ட் ஷாக் வச்சு கொலை செய்யத் திட்டமிடுகிறாள். அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, அர்ஜுனிடம், உன் பொண்டாட்டி இன்னும் கொஞ்ச நேரத்தில் கருகி செத்துப் போயிருவான்னு ஒரு க்ளூ மட்டும்தான் தருகிறாள்.
அனுவுக்கு தெரியும்
அனுவுக்கு ரோஜாவை கடத்தினவன் யார் என்று தெரியும். இருந்தும் கூட, அவளிடம் மிரட்டி இதை கேட்க அர்ஜுன் நினைக்காதது ஏன் என்று தெரியவில்லை. ஒரு போன் கால் க்ளூ இல்லை. ஆனால், போரூர் என்று இன்ஸ்பெக்டரை அழைச்சுக்கிட்டு போறான்.
பவர் கட்
போரூரில் நின்று கொண்டு, கருகி சாவான்னு சொன்னதை வச்சு அப்படி சாக்ஷியோட ஆள் சொன்னான்.. போரூர் முழுக்க பவர் கட் பண்ண சொல்லுங்கன்னு சந்திர காந்தாகிட்ட சொல்றான். தீடீர்னு ரோஜாவை கடத்தி வச்சு இருந்த பில்டிங்குக்கு சூப்பர் மேன் மாதிரி வர்றான் பாருங்க... நிஜமா சினிமாவை விஞ்சும் காட்சிகள் அங்கே அரங்கேறுது.
மெயின் கதை
அனு செண்பகம் அம்மா பொண்ணு இல்லைன்னு நிரூபிக்க வேண்டியது மெயின் கதை. அதை ஆண்டாண்டு காலமாக இழுத்துக் கொண்டே போறாங்க. நடுவில் இது மாதிரி அதிரடி கதையை புகுத்திட்டு மறுபடி மெயின் சப்ஜெக்ட் இழுவைக்கு வந்திடறாங்க.