Roja serial: சும்மா இருந்தா எப்படி சார் புடவையை சரி பண்ணி விடுங்க!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல், ஒரு வித்தியாசமான சீரியல் என்று சொல்லலாம். சீரியல் படப்பிடிப்பே கொஞ்சம் வித்தியாசமாக ரசிக்கும் படி இருக்கிறது.
நடிகர் நடிகைகள் அப்படியே கதாபாத்திரங்களாக மாறி நடித்து இருப்பதும் கூட சீரியலுக்கு பெரும் பிளஸ் என்று சொல்லலாம்.. அப்பாவியாக நடிக்கும் கல்பனா, மருமகளே என்று அதட்டும் அன்னபூரணி அம்மா என்று சீரியல் கதாபாத்திரங்கள் அமர்க்களப்படுது.
இவர்கள்தான் இப்படி என்றால் அன்னபூரணி அம்மாவின் பேரன்,அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்த ரோஜாவை கல்யாணம் செய்துகிட்டு வந்துட்டு அவன் பேசும் சட்டங்களும், நடந்துக்கும் முறைகளும் ரசிக்கும்படியாக இருக்கிறது.
புடவையை சரி
சார், கிளம்புன்னு சொல்லிட்டு அப்படியே நின்னா என்ன அர்த்தம் சார். எனக்கு இந்த புடவை மடிப்பை சரி பண்ணி விடுங்க சார்னு, புருஷன் அர்ஜுனை கூப்பிடறா ரோஜா. இந்த புருஷர்களுக்கு எல்லாம் இதே வேலையா போச்சு ரோஜா. பொண்டாட்டியை வெளியில கிளம்புன்னு சொல்லிட கூடாது.உடனே புடவையை சரி செய்ய வந்துடணும்.ஆனா, இது கூட நல்லலாத்தான் ரோஜா இருக்குன்னு சொல்லிட்டு, அவளின் புடவை மடிப்பை சரி செய்து விடறான் அர்ஜுன்.
சார் போதும்
சார் போதும் விடுங்க சார்...நீங்க அப்படியே ரொமான்ஸ் மூடுக்கு போயிருவீங்கன்னு சொல்றா ரோஜா. ரோஜா பொண்டாட்டி புடவை கட்டறதை பார்த்து ரசிக்கறதே ஒரு சந்தோஷம்தான்.அதிலும் இந்த புடவை மடிச்சு விடுவது இருக்கே இது எவ்ளோ சந்தோஷம் தெரியுமா? சரி இரு நான் கிளம்பிட்டு வரேன்னு போறான்.
சார் என்ன
என்ன சார் இது பேன்ட் ஷர்ட்ல வந்திருக்கீங்க. நாம போறது குல தெய்வம் கோயிலுக்கு,வேட்டி கட்டிக்கிட்டு வாங்க சார்னு சொல்றா. ரோஜா நம்ம கல்யாணத்துக்கே எனக்கு கட்டத்தெரியாம என்னோட அஸிஸ்டெண்ட்தான் கட்டி விட்டான். இப்போ நீ கட்டிவிடு ரோஜான்னு சொல்றான்.எதுக்கு சார்.. நான் வேட்டி கட்டிவிடுவேன்.. நீங்க ரொமான்ஸ் மூடுக்கு போயிருவீங்க.வேணாம் சார்னு ரோஜா சிணுங்கறா.
போர் ரொமான்ஸ்
வீட்டில் இந்த ரூமில் ரொமான்ஸ் செய்து போரடிக்குது ரோஜா.அப்படியே டிராவலிங்கில் வயல்வெளி, தோப்பில் நிறுத்தி ரொமான்ஸ் பண்ணலாம் ரோஜான்னு சொல்றான்.அப்படியா இருங்க கட்டிவிடறேன்னு சொல்லிட்டு, இது 8 முழம் வெட்டி சார்.இரண்டா மடிச்சுதான் கட்டணும். இருங்க கட்டிவிடறேன்னு சொல்லி கட்டிவிடறா.