Roja Serial: ஆமாம் அனு ...நான் ஜெயிக்கற கூட்டணிதான் கல்பனா பொங்கல்!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் இதுவரை ஒளிபரப்பான எபிஸோட்க்ளில் ஒன்று கூட போரடிச்சதில்லை. எதுக்கு தேவை இல்லாமல் காட்சிகளைத் திணிக்கிறாங்க என்று பார்க்கும் மக்கள் நினைக்கும்படியாக இதுவரை ஒரு காட்சி திணிப்பு இல்லை.
சன் டிவியில் இதுவரை ஒளிபரப்பான ரோஜா சீரியல் எபிசோட்களில் 80 சதவிகிதம் எபிசோட் வீட்டுக்குள் கி ட்டத்தட்ட 10 பேரை வச்சு சற்றும் போரடிக்காமல் சீரியலை கொண்டு போவது பாராட்டுதலுக்கு உரியது. ஒரே வீட்டில் ஷூட்டிங் நடத்தி இருப்பத்தால் மட்டுமே சீரியலில் சுவாரஸ்யமில்லை.
புதுமை இல்லை என்றும் குறையாக நினைக்காதபடி குடும்பத்தில் நடக்கும், கதையும், காட்சிகளின் சுவாரஸ்யமும் கூடி மக்களை மகிழ்ச்சியாகப் பார்க்கும்படி ரோஜா சீரியல் ஒளிபரப்பாகிட்டு வருது. ஒரே வீட்டின் பல்வேறு இடங்களில் அறைகளில் அவ்வப்போது ஒரே காட்சிகள். ஒரு எபிசோட் முழுக்கவும் தொய்வில்லாமல் மிகவும் சுவாரஸ்யமாக அடிக்கடி ஒளிபரப்பியும் வருகிறார்கள்.
டீம் இயக்குநர்
ரோஜா சீரியல் நடிகைகளும் சரி, இயக்குநரும் சரி தங்களது பணிகளை சிறப்பாக செய்கிறார்கள். வீட்டுக்குள்ளே தான் முழு எபிசோட் ஷூட்டிங் என்றாலும், காட்சிகளை சுவாரஸ்யமாகத் தந்து சீரியலை கூட ரிச்க்காக ஷூட்டிங் செய்து வருகிறார்கள்.இது பாராட்டுதலுக்கு உரியது.
அடிக்கடிகாட்சிகள்
ஏனோ ரோஜா சீரியலில் ம ட்டும் கிரிமினல் லாயர் .கொலைகாரி, நல்லது செய்யும் நினைக்கும் குடும்பத்துக்கு முதல் தலைமுறை மருமகளாக வந்து இருக்கும் கள்பனா, இரண்டாவது தலைமுறை மருமகளாக வந்திருக்கும் ரோஜா, பாட்டி, கெடுதலை மற்றும் நினைக்கும் கேடி பொண்ணு அணு இவளுக்கு ஆதரவுவாக யசோதா பாலு என்று இருந்தாலும், சீரியலில் ஹைலைட்டாக தனிப்பட்ட முறையில் எதுவும் தெரியாமல் அனைத்தும் கலந்த கூட்டுக கலவையாக சீரியல் மிகவும் ரசிக்கும்படி ஒளிபரப்பாகி வருகிறது.
சூப்பர் கல்பனா
மாடியில் மகன் அர்ஜுன், மறுமகள் ரோஜா இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.எதுக்கு ரோஜா இந்த நேரத்தில் வந்தேன்னு கல்பனா கேட்க, அத்தை நேத்து போலீஸ் சந்திரகாந்த வந்தப்போ எனக்கு உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுருச்சுன்னு சொல்கிறாள். ரோஜா நீ வேற..உனக்கு நடுக்கம் மட்டும்தான் எனக்கு மயக்கமே வந்திருச்சுன்னு அத்தை கல்பனா சொல்றாங்க.
வைர அட்டிகை எப்படி
அத்தை நாம்தான் வைர அட்டிகையை எடுக்கலையே..எப்படி இது அணு ரூமுக்கு போயிருக்கும்னு பேசிக்கறாங்க. அங்கு அர்ஜுன் வருகிறான்.நீங்க இரண்டு பேரும்தான் கருப்பு போர்வையை போர்த்திக்கிட்டு பாட்டி ரூமுக்குள்ளே போனீங்க நான் பார்த்தேன்னு சொல்ல. அய்யையோ அர்ஜுன் நாங்க பாட்டி ரூமுக்குள்ள போனது உண்மைதான். அத்தை லாக்கரில் நகை இல்லைன்னு சொல்றாங்க.
நான்தானே எடுத்தேன்
எப்படி இருக்கும்..அதை நான்தானே எடுத்து அணு ரூமுக்குள்ள வச்சேன்னு சொல்றான்.அர்ஜுன் நீ பெரிய கிரிமினல் லாயர்னு பேர் எடுத்தவன்.இப்போ பெரிய திருடன்னு பேர் எடுத்துடுவா போலிருக்கேன்னு கல்பனா வெகுளியாகப் பேச... அம்மா நீங்கள காட்டிக் குடுத்துடுவீங்க போலிருக்கே. அணு, யசோ பாலு எல்லாரும் நகையைத் திருடி ரோஜா ரூமில வச்சுக்கு ரோஜாவை வீட்டி விட்டுத் துரத்தனும்னு பேசிகிட்டு இருந்ததை கேட்டேன்.
பயந்துட்டீங்க
சரி உங்களாலே முடியாது..நீங்க பயந்துகிட்டு இருந்தீங்க. அதான் நான் எடுத்து அணு பீரோவுக்குள்ள வச்சேன்.இப்போ அணு ரூமிலில் இருந்தால் பிரச்சனை இல்லாமப் போச்சு.இதே அவங்க திட்டமிட்டபடி ரோஜா ரூமிலிருந்தால், அதை எப்படி அப்படியே விட்டு இருப்பாங்களா. இந்நேரம் ரோஜா ஜெயிலில் இருப்பாள்.. அவளுக்குத்தான் இங்கே பாட்டி ஆதரவு ரோஜா மேல களங்கம் இதைத் தடுக்கத்தான் நான் திருடினேன்.
இதை போயி எல்லார் கிட்டயும் சொல்லி பெருமை அடிச்சுக்காதீங்க வீட்டு கவுரவம் போயிரும் இது போன்ற சுவாரஷ்யமாக வசனங்கள் பேசப் படுவதால் ரோஜா சீரியல் பார்க்க ஜாலியாக இருக்கிறது.