Roja Serial: உண்மையில் இதெல்லாம் நடக்குமா? கூச்சமா இருக்காது?
சென்னை: குடும்பத்தில் இதெல்லாம் நடக்குமா? அப்படி நடந்துக் கொள்பவர்களுக்கு கூச்சமா இருக்காதான்னு கேட்கிற அளவுக்கு தொலைக்காட்சி சீரியல்களின் காட்சிகள், கதாபாத்திரங்கள் இருக்குதுங்க.
ஒரு புருஷன் பொண்டாட்டி அறைக்குள் ரொமான்ஸ் செய்வதை ஒளிந்திருந்து பார்ப்பது... இருவர் முக்கியமான விஷயம் பேசுவதை ஓட்டு கேட்பது..
முக்கியமானவங்க பார்க்கும்போது எங்காவது ஒளிந்துக்கொள்வது..ஒருத்தருக்கு வரும் போனை இன்னொருவர் எடுத்து பேசுவது என்று எல்லை மீறிய செயல்கள்...
அணு ரோஜா
சன் டிவியின் ரோஜா சீரியலில் அணு ரோஜாவின் ஆதாரத்தை திருடிக்கொண்டு வந்து நான்தான் உங்க வீட்டுப் பொண்ணுன்னு அன்னபூரணி அம்மாவோட ஆதரவோடு வீட்டுக்குள்ளே புகுந்துடறா. அன்றிலிருந்துதாங்க எல்லை மீறிய செயல்கள்..குடும்பத்தில் இப்படியும் நடக்குமா என்கிற அளவுக்கு போகுது.
Thirumanam Serial: அட இது நவரச நாயகன் பூ வேலி படம் மாதிரி இருக்கே!
மோசமான பொண்ணு அணு
எப்போ பார்த்தாலும் திருட்டுத் தனம்.. உடனே முகத்தை மாத்திக்கிட்டு பொய்யாக நடிப்பது என்று பார்க்கும்போதே எரிச்சலா வருது. இந்த மாதிரி பொண்ணுங்க இருக்கும் குடும்பம் உருப்படுமா?
அணு அஷ்வின்
அஷ்வின் மாமாவை கல்யாணம் செய்துகிட்டு இந்த குடும்பத்து மருமகள்னு சொல்லி பையா கணேஷ் கொலைக் கேசில் இருந்து தப்பிச்சுக்கலாம்னு அணு கணக்குப்போட்டு அஷ்வின் மாமாவைத்தான் கல்யாணம் செய்துக்குவேன்னு அடம் பிடிக்கறா.உண்மையை நிரூபித்து இவளை கொலைக் கேஸில் பிடிச்சுடணும்னு அர்ஜுன் திட்டம் போடறான்.
யார் கை எழுத்து?
உண்மையா அனுதான் இந்த வீட்டு பொண்ணா,இல்லை ரோஜாவான்னு கண்டு பிடிக்க இருவரின் கை எழுத்தையும் ஒப்பிட்டுப் லாயர் அர்ஜுன் பார்க்க முடிவு செய்து, அனுவிடம் கை எழுத்து வாங்க நைஸ் பண்ணுகிறான் அஷ்வின்.முதலில் எழுதிக் கொடுத்துவிட்ட அணு, பின்னர் ஒளிஞ்சு இருந்து உண்மையை ஓட்டுக் கேட்கிறாள்.
கண்ணாமூச்சு ஆட்டம்
தான் எழுதியதை அத்தை பூஜை அறையில் வைப்பதையும் ஒளிந்து இருந்து பார்க்கறா. அத்தை வெளியில் வரும்போது ஓடிப்போய் ஒளிஞ்சுக்கறா. இதை எல்லாம் பார்க்க பார்க்க மனசு இப்படியும் பெண்களை சித்தரிக்கிறார்களே என்று கோவம் வருது.குடும்பத்தில் இப்படி பெண்கள் இருக்க கூடாது என்பதற்கு அவ்வப்போது எதையாவது சொல்லி நினைவு படுத்த வேண்டிய கட்டாயத்தில்தான் அனைத்து தொலைக்கட்சி சீரியல்களும் இருக்கின்றன.